“சான்றோர், அறிஞர், நிபுணர் -
இவர்கள் வாக்கு ஒருபோதும் பொய்யாகாது”
என்பது உலக வழக்கு.
அதே மூச்சில் “யானைக்கும் அடி சறுக்கும்”
என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
கீழே கொடுத்திருக்கும் ஆரூடங்களையும்
அவற்றின் தற்கால நிலையையும்
ஒப்பிட்டுப் பார்க்கும்போது
எத்தனை யானைகளுக்கு
எத்தனை யானைகளுக்கு
அடி சறுக்கியிருக்கிறது
என்பது புரியும்.
என்பது புரியும்.
ஒவ்வொரு நூற்றாண்டு ஆரம்பத்திலும்
பெரியபெரிய அறிஞர்களையும்
விஞ்ஞானிகளையும் அவர்களுடைய
பொன்னான அபிப்பிராயங்களைக் கேட்க
பேட்டி எடுப்பது பத்திரிகைகளுக்கு
ஒரு விளையாட்டான பொழுதுபோக்கு.
அப்படிப் பேட்டி எடுத்துப் பத்திரிகைகளில்
பிரசுரமான சில பெரியவர்களின் கருத்துகளை
இங்கே படியுங்கள்.
அவர்கள் சொன்ன கருத்துகள்
பல விஷயங்களைப் பற்றியது.
அவற்றில் சிலவற்றை இங்கே
கொடுத்திருக்கிறேன்.