Sunday, October 09, 2011

நான் நிரந்தரமாக வாழ ஆசைப்படுகிறேன் -உங்கள் உதவியுடன்

விளம்பரத்துக்கு ஆசைப்பட்டுக் கோவில் படிகளிலும், கோவில் விளக்குகளிலும் தாங்கள் அளித்த நன்கொடையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தக் காலத்தில், நிறைய பெரிய மனிதர்கள், எந்த ஒரு விளம்பரத்தையும் எதிர்பாராமல் தங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் தத்துவ ஞானி – ரேமாஜி (1913 – 1990) .
இவர் விட்டுச் சென்ற தத்துவ பாதை ‘மாஸ்க்விஸம்’ .(www.masquism.com).
இவர் யார் என்று பல பேருக்குத் தெரியாது என்பதில் ஒரு ஆச்சரியம் இல்லை. ஏனெனில் இவர் ஒரு விளம்பரப் பிரியர் அல்ல.
இவருடைய பூர்வாசிரமப் பெயர் – R. வைத்தியநாதன். இதுவும் ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது.