Tuesday, March 26, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி 2



1953ல் சென்னை வந்தேன்.
நேஷனல் ஸ்கூலில் வாத்யார்.
கல்சரல் ஷாக்,கல்சரல் வித்யாசம்
என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
சொந்த அநுபவம்-சென்னையில்.
ஒரு தேசத்திற்க்கும்,ஏன்,ஒரு 
மாகணத்துக்கும் பேச்சிலே,
சாப்பாட்டிலே வித்யாசம்
இருக்கலாம்-நிறையவே இருக்கு.
ஆனால்,தமிழ் நாட்டு மொழியான 
தமிழ்,மாவட்டத்துக்கு மாவட்டம் 
எப்படி வித்யாசமாக 
அறியப்படுகிறது என்பதை 
தெரிந்து கொண்டேன்.
சென்னை வந்த சில நாள்களில்,
என் அக்காவுடன் ஜியார்ஜ் டவுனுக்கு
சென்றேன்.பஸ்ஸிலிருந்து இறங்கி
ஒரு ரிக்‌ஷாக்காரரிடம்,
( கார்..கவனியுங்கள்-நெல்லை பண்பு),
"என்ன வே..மின்ர்வா சினிமா
எங்கே இருக்கு?."என்று கேட்டேன்.
ரிக்‌ஷாக்காரருக்கு வந்ததே கோபம்..
"என்னையா,உன் பெண்டாட்டி 
என்று நினத்தாயா?
"ஏ" போட்டுக் கூப்பிடறே?"
(..சீவிடுவேன்..அப்போ அப்படி
சொல்லலை..இப்போ சொல்லி இருப்பார்..சினிமாவின் தாக்கம்)
என்று கத்தினார்.கூட்டம் சேர
ஆரம்பித்தது.(இது சென்னையின் இன்னோரு நல்ல பழக்கம் என்று 
பிறகு தெரிந்துகொண்டேன்)
முதலில் புரியவில்லை.
அவர் கோபத்தின் காரணம்.
அப்புறம் தான் புரிந்தது..
நெல்லையின் மரியாத சொல் ஆன
"வே",தப்பாக,"ஏ" ஆக புரிந்து
கொண்டது.
என் விளக்கத்தை கேட்க 
விரும்பாதவரிடம்
மன்னிப்பு கேட்பதை தவிர 
வேறு வழியில்லை.
மறு நாள்,பஸ் பயணம்..
பஸ் கண்டக்டர்
" டிக்கட் எடய்யா?" 
என்று ஏக வசனத்தில்,
சுந்தர தமிழில்,கூவினார்.
முதலில் ஷாக்காக இருந்தது.
இப்போ தப்பித்தவறி,கண்டக்டர்,
"சார்,டிக்கட் எடுத்து விட்டீர்களா" 
என்று கேட்டால் எனக்கு 
ஒரு கூச்சம் உண்டாகிறது.
என்.எஸ்.கிருஷ்ணன் சொல்வார்.
"சென்னையா,அவாளுக்கு என்று
ஒரு தனி பாஷை."
இப்படியாக அடுத்த 50 ஆண்டுகள்
சென்னையோடு ஒன்றி விட்டேன்.

இப்போ கதை தொடர்கிறது...