Thursday, May 02, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி -4 நிறைவு பகுதி



பிரபா - நாகராஜன் உரையாடல் தொடர்கிறது.
பிரபா: 
என் கேள்விக்கு என்ன பதில்?
நான்: 
(பார்த்த)கேட்ட ஞாபகம் இல்லையோ?
பிரபா: 
சினிமாப்  பாட்டு புதிர் 
போதும் என்று நினைக்கிறேன். விஷயத்திற்கு வாரும்.
நான்: 
சரி.. முதலில் நாயின் 
மூலத்தைப் பற்றிக் கொஞ்சம் 
ஆராய்வோம்.
நாய் ஒரு அனைத்துண்ணி. 
பாலுண்ணி (பாலூட்டி) விலங்கு.
இப்பொழுது உலகம் முழுவதும்
"Pet" ஆக வளர்க்கப்படும் 
இந்த நாய் ஜென்மம் எப்போது
எங்கே, ஏன் இப்படி வளர்ப்பு 
நாயாக மாறிற்று என்பதை 
இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். 
எல்லோராலும் அநேகமாக 
ஒத்துக்கொள்ளப்பட்ட 
விஷயம் என்னவென்றால் 
நாயின் மூதாதையர்கள் 
Eurasian Grey Wolf 
(canis lupis) - 
ஐரோப்பியக் கண்டத்து 
ஓநாய்கள்தான். 
வெறித்தனம் கொண்ட 
ஓநாய்கள் எப்படி நம்முடைய 
நண்பர்களான நாய்களாக 
மாறின  என்பதுதான் 
ஆராய்ச்சி.
2005ஆம் ஆண்டு DOG 
genome (DNA) 
டாஷா என்ற Boxer வகை 
நாயிடமிருந்து எடுக்கப்பட்டது. 
இதன் முழு விபரம் இன்னும் வெளிவரவில்லை.











இதற்கு முன் வெளியிடப்பட்ட 
ஆராய்ச்சிகள் நாய்கள் 
கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து 
வந்திருக்க வேண்டும் 
என்று சொல்கின்றன.
எது எப்படியோ, குறுக்கு 
புத்தியும், விஷமத்தனமும் 
உள்ள ஓநாய் வர்க்கம்- 
அன்பு,பாசம்,நம்பிக்கை
புத்திசாலித்தனம் உள்ள 
நாயாக மாற்றப்பட்டது 
என்பது வரவேற்க 
வேண்டிய விஷயம்தானே?
பிரபா: 
நாய்களில் எத்தனை 
வகைகள்
தமிழ் இலக்கியத்தில் அவை 
எப்படி அழைக்கப்படுகின்றன?