Sunday, November 06, 2011

ஒரு வயதானவரின் பிரார்த்தனை, வேண்டுகோள்!




பிரார்த்தனை, கடவுளிடம்:

கடவுளே, எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியும்.

வளவளவென்று பேசிக்கொண்டிருக்கிறேன். நான் வாயாடி’, 
உளறுவாயன்’ என்று பெயர் எடுப்பதைத் தடுத்து நிறுத்து.

எல்லா விஷயங்களிலும் கேட்டோ கேட்காமலேயே 
என் அபிப்பிராயத்தைச் சொல்லத் துடிக்கும் 
பழக்கத்தை விட்டுவிட உதவிசெய்.