Monday, August 20, 2012

மனித நேயத்தோடு வாழ உதவும் மூன்று மந்திரங்கள் (தங்க விழா கிளறல்)


இந்தக் கட்டுரை "திருநெல்வேலிக் குப்பை"யின் 
"தங்க விழா"க் கிளறல்.
பொழுது போக்குக்காக இரண்டு பேர் 
தூண்டுதலின் பேரில் விளையாட்டாக 
எழுத ஆரம்பித்த என் "எழுத்துப் பணி" 
ஐம்பது வாரங்களாகத் தடை 
இல்லாமல் தொடர்ந்திருக்கிறது 
என்று என்னால் நம்பவே முடியவில்லை. 
ஆச்சரியமாக இருக்கிறது. 
ஆனால் உண்மையாகவே நடந்திருக்கிறது.
ஜனகராஜ்  காமெடியன் போல், 
"நாகராஜா, சும்மா சொல்லக் கூடாது, 
எப்படிடா இந்த ஐடியாவெல்லாம் 
உனக்குத் தோன்றுகிறது?" 
என்று பீத்திக்கொள்ள ஆசைதான். 
இருந்தாலும் உண்மை அது இல்லை. 
இதற்கு  முழுப் பொறுப்பு இரண்டே பேர். 
ஒன்று, என் மனைவி; 
இரண்டாவது என் நண்பன் 
க்ரியா ராமகிருஷ்ணன்.