Sunday, January 08, 2012

மனைவிமார்களே! மார்க் போடலாம்,வாருங்கள்.... உங்கள் கணவன்மார்களுக்கு.

ஒவ்வொரு பெண்ணும், தன் திருமணத்திற்கு முன்
தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி 
தன் மனதுக்குள் ஒரு உருவகத்தை 
நினைத்து வைத்திருப்பாள். 
அதில் எத்தனைப் பேருக்கு அந்தக் கனவுக் 
கணவன் நிஜ வாழ்க்கையில் அமைவான் 
என்பதற்கு ஒரு புள்ளிவிவரமும் கிடையாது. 
பெரும்பான்மையான (ஏன் எல்லா பெண்களுமே 
என்றுகூடச் சொல்லலாம்) பெண்கள் திருமணத்திற்கு 
பிறகு தனக்கு அமைந்த கணவர்கள் 
விதிப்படி அமைந்ததுஎன்ற  
வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

கனவு வேறு, நிஜம் வேறு என்பதில் 
ஒரு திடச் சித்தம் உள்ளவர்கள் 
தங்களை மாற்றிக்கொள்வார்கள். 
ஆனால் நிச்சயமாக, அவர்கள் உள்மனதில் 
நம் கணவரும் மற்ற கணவர்மார்கள்போல 
இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் 
இருக்கத்தான் செய்யும்.

அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவர் ஆத்துக்காரர் கொஞ்சறத கேட்டேளா?” 
என்ற பாடல் கேட்கும்போது ஒரு சிறு 
உறுத்தல் தோன்றலாம்.

உங்கள் மனதில் உள்ள உங்கள் கணவரைப் 
பற்றி இருக்கிற எண்ணங்களை வெளியே 
கொண்டுவர, இதோ ஒரு சந்தர்ப்பம்.