Monday, December 05, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள – பகுதி 1



கீதை என்ற வார்த்தையைச் சொன்னவுடன் 
எல்லோருக்கும் ஞாபகம் வருவது 
பகவத் கீதைதான். 
விளக்கம் கேட்டால், தப்பாமல் இது 
கிருஷ்ணர் அர்சுனனுக்குச் சொன்ன 
உபதேசம் என்று சொல்வீர்கள்.

ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு, இன்னெரு 
கீதை இருக்கிறது  என்ற விஷயம் தெரியும்

அவர்களுக்காக இந்தச் சிறிய அறிமுகம்.

இந்த கீதைக்குப் பெயர் உத்தவ கீதை. 
ஹம்ஸ கீதை என்றும் சொல்வார்கள். 
இதை எழுதியவரும் வேத வியாஸர்தான். 
இதுவும் கிருஷ்ணரால்ஒரே நபருக்கு 
உபதேசம் செய்யப்பட்டது (one to one). 

பகவத் கீதை, மஹாபாரதத்தில் அர்சுனனுக்கும் 
கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்.

உத்தவ கீதை, பாகவத புராணத்தில், உத்தவருக்கும் 
கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்.

பாகவத புராணத்தில், 11ஆவது ஸ்காந்தத்தில் 
அத்யாயம் 6 : 11 இலிருந்து 29 அத்யாயம்வரை 
வருகிறது. கிட்டத்தட்ட 1000 பாடல்கள்.

இந்த உத்தவர் யார்?