ஒரு திருஷ்டாந்தக் கதை
இது ஒரு ஆசிரியரையும் அவருடைய
மாணவனையும் பற்றிய கதை.
அவர் மிகவும் நல்லவர்.
ஒரு நாள் அவருடைய பிரியமான
மாணவன் அவரைப் பணிவுடன் அணுகி,
“ஐயா, என் படிப்பு முடிந்துவிட்டது.
நான் வீடு திரும்பும்முன் உங்களுக்கு
ஏதாவது பொருளைக் காணிக்கையாகக்
கொடுக்க விரும்புகிறேன்.
ஆனால் உங்களுக்கு என்ன கொடுப்பது
என்று தெரியவில்லை. அதனால் தயவுசெய்து
நீங்களே நான் என்ன செய்ய வேண்டும்
என்று கட்டளையிடுங்கள்” என்றான்.
அந்த நல்ல ஆசிரியர் சிஷ்யனை
வாஞ்சையுடன் பார்த்து “குழந்தாய், நான்
உன்னிடமிருந்து எதையுமே
எதிர்பார்க்கவில்லையே?
இருந்தாலும் நீ ஆசைப்பட்டுக்
கேட்பதனால் சொல்கிறேன்.