Monday, March 04, 2013

பதின்மவயதினரைச் (Teenagers) சமாளிக்கச் சில யோசனைகள்



13 வயதிலிருந்து 19 வயதுவரை உள்ளவர்களை டீன்ஏஜர் 
என்று அழைக்கிறோம். 
குழந்தைப் பருவத்திற்கும் 
வாலிபப் பருவத்திற்கும் இடையில் 
இருக்கும் இந்த ஏழு ஆண்டு பருவம் 
ஒரு இரண்டுங்கெட்டான் பருவம்.
பெற்றோர்கள் எந்த நாட்டில் 
இருந்தாலும் எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கவலையோடு சந்திக்கும் பருவம். 
தங்கள் குழந்தைகள் எப்படி உருவாகப்போகிறார்கள் என்ற 
ஏக்கம் ஒரு பொதுவான நிலை. பெரும்பான்மையான பெற்றோர்கள் 
இந்த adolesent ageஐ ஒரு எதிர்மறையாகவே சிந்தித்து 
இந்தப் பருவத்தினரை 
angry, argumentative, annoying 
என்று நினைக்கிறார்கள். 
அந்த "A" வரிசையில் ஏன் அவர்களை 
angel ஆகவோ அந்தப் பருவத்தை awesome என்றோ நினைக்கக் கூடாது?
பதின்மவயதினர் பிரச்சினை 
எல்லா நாட்டின் பெற்றோர்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் 
இதன் முழுத் தாக்கம் இருப்பது மேலைநாடுகளில். குறிப்பாக
அமெரிக்கா போன்ற நாடுகளில்தான். 
மற்ற நாட்டுக் குழந்தைகளைவிட 
(இந்தியா,சீனக் குழந்தைகளைவிட) 
இந்த நாட்டுக் குழந்தைகள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். எத்தனையோ காரணங்கள்
கல்வி, கலாச்சாரம், பெற்றோரின் அணுகுமுறை என்று. 
என்ன படிப்புப் படிக்க வேண்டும்
யாரிடம் பழக வேண்டும் என்ற பல பிரச்சினைகளைத் தேர்ந்தெடுப்பதில் பரிபூரணசுதந்திரம் உண்டு. 
இவர்களுக்கு எங்கெல்லாம் பெற்றோர்களின் அடைக்கலம் கிடைக்கிறதோ அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்ல முறையில் 
வளர்கிறார்கள். எங்கெல்லாம் 
குடும்பப் பிரச்சினைகள் இருக்கிறதோ, அந்தச் சூழ்நிலையில் வாழும் 
குழந்தைகளின் எதிர்காலம் 
ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. 
ஆக குடும்பம் என்பது 
ஒரு அளவுகோலாக இருக்கிறது.