‘அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது!
என்று ஔவையார் பாடியுள்ளார்.
இந்த அரிய பிறவியின் பயன்
இறைவன் அடியைச் சேருவது.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
நீந்தார் இறைவன் அடி சேராதார்”
வள்ளுவர் கூற்று.
இறைவன் அடியைச் சேராதவர்கள்
பெருங்கடலில் நீந்திக்கொண்டிருப்பார்கள்.
இறைவனின் திருவடியைத் தொழுவதே
கல்வியினால் உண்டாகும் பயன்.
இறைவனடி தொழுதல் பக்தி எனப்படும்.
பக்தி என்பது இறைவனிடம் நாம் வைக்கும்
நம்பிக்கை. நமக்கு அவரிடம் ஒரு உறவை
ஏற்படுத்துவது பக்தி.
இறைவனிடம் பக்தி கொள்ள
எத்தனையோ வழிகளை
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அவற்றில் முக்கியமான ஒன்பது வழிகள்
ராமாயணத்திலும் பாகவத புராணத்திலும்
விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றையோ,
அல்லது இரண்டு, மூன்று வழிகளைச் சேர்த்தோ
கடைப்பிடித்துவந்தால் நிச்சயமாக
இறைவனடி அடையலாம் என்பதைத்
தங்கள் வாழ்க்கையின் மூலம்
பல மகான்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.
இந்த பக்தி மார்க்கம் சுலபமானது.
வீட்டை விட்டுக் காடு செல்ல
வேண்டியதில்லை.
கடுமையான விரதங்களை
அனுஷ்டிக்க வேண்டியதில்லை.
இதோ அந்த 9 வழிகள்:
“ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்.”
இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின்
விளக்கம் பின்வருமாறு: