Sunday, July 28, 2013

கோயம்புத்தூர், சென்னை விஜயம் - சில அனுபவங்கள்-1

14 மாத இடைவெளிக்குப் பிறகு 
இந்தியப் பயணம். 
சரியாக 30 நாட்கள் 
(ஜூன் 21-ஜூலை 21) 
முந்தையப் பயணத்தில் மனைவியுடன்
தென்இந்தியாவையும் 
வடஇந்தியாவையும் கலக்கின 
மாதிரி இந்தத் தடவை 
செய்ய முடியவில்லை. 
தனி ஆள், கோவை 1 வாரம்
சென்னை 3 வாரங்கள் 
என்று நிறுத்திக்கொண்டேன்.

ஆனால் அனுபவங்களுக்குக் 
குறைச்சல் இல்லை. 
பலதரப்பட்ட சுவைகள். 
அதில் தூக்கலாக இருப்பது - 
வருத்தம் (sadness).
உங்களிடம் பகிர்ந்துகொள்ள 
ஆசை! இதோ ஆரம்பம்.
முதல் தடவையாக, அமெரிக்க நகர்
Newark (EWR)லிருந்து மும்பைக்கு 
non-stop பயணம். அதுவும் முதல் 
தடவையாக,business classல். 
சொர்க்கத்தைப் பார்க்க 
முடியாதவர்களுக்கு 
இந்த மாதிரிதான் இருக்கும் 
என்று தோன்றவைக்கும் பயணம். 
14 1/2 மணி நேரப் பயணம் 
அலுப்பில்லாமல் கழிந்தது. 
Flat bed மூலம் காலை நீட்டிப் 
படுத்து தூங்க முடிந்தது. 
(கொடுத்துவைத்தவர், சார் 
நீங்கள் என்று முணுமுணுப்பது 
கேட்கிறது. Yes. உண்மைதான்!) 
மும்பையில் இரவு தங்கி
மறுநாள் சென்னை வழியாக 
கோயம்புத்தூர் பயணம். 
கோயம்புத்தூரில் என் பேரனுக்குப் 
பூணூல் வைபவம்.