Sunday, July 08, 2012

தெரிந்த பாதை- தெரியாத பாதை: இதில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?



கேள்விக்குப் பதில் சொல்ல நினைக்கும் முன்
இந்தக் கதையை முதலில் படியுங்கள்.

இந்தக் கதையின் பெயர் “The Black Door” 
எழுதியவர் யார் என்று சரியான தகவல்கள் 
இல்லை. Paul J. Meyer என்றவர் 
எழுதியதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. 

கதையைப் படிக்கலாமா?

ரொம்பரொம்ப காலத்திற்கு முன்
பாரசீக நாட்டில் ஒரு புகழ்பெற்ற 
படைத் தலைவர் (Army General) இருந்தார். 
பெரிய வீரர். மிக புத்திசாலி
மனிதாபிமானம் கொண்ட தயாள குணம் 
படைத்தவர்.

இவர் போர்க் கைதிகளை நடத்திய 
விதம் புதுமையானதாகவும், அதே சமயம்
புதிரானதாகவும் இருந்தது. 
இவர் காலம், ஜெனீவா கன்வன்ஷன் 
(Geneva Convention) போர்க் கைதிகளை 
எப்படி நடத்த வேண்டும் என்ற 
ஒரு ஒப்பந்தம்  நடைமுறைக்கு வராத காலம்.