பிரார்த்தனை, கடவுளிடம்:
கடவுளே, எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியும்.
வளவளவென்று பேசிக்கொண்டிருக்கிறேன். நான் ‘வாயாடி’,
‘உளறுவாயன்’ என்று பெயர் எடுப்பதைத் தடுத்து நிறுத்து.
எல்லா விஷயங்களிலும் கேட்டோ கேட்காமலேயே
என் அபிப்பிராயத்தைச் சொல்லத் துடிக்கும்
பழக்கத்தை விட்டுவிட உதவிசெய்.