விளக்கம்1:
ஸ்ரீ தத்தாத்ரேயர் தன்னுடைய 24 குருக்களைப் பற்றி
கூறியிருக்கிறாரே? அதுவும் இதுவும் ஒன்று தானா
என்று சில பேர்கள் கேட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர்,உத்தவருக்கு சொன்ன கதையில்,
அவதூதர் என்று மட்டும் தான் சொல்லிருக்கிறார்.
அவதூதரின் பெயர் குறிப்பிடவில்லை.
ஆனால்,ஸ்ரீ தத்தாத்ரேயர் கதைகளில் மட்டும் தான்,
இங்த 24 குருமார்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும்,.பரசுராமருக்கு,இவர் உபதேசம் செய்திருக்கிறார்.
அதனால்,ஸ்ரீ தத்தாத்ரேயர் காலம்,பரசுராம
அவதாரத்துக்கு முற்ப்பட்டதாக இருக்க வேண்டும்
என்று தெரிகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரும்,யது ராஜாவை தன்னுடைய மூதாதயர்
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீ ரமண மஹரிஷியும் இந்த அவதூதர் ,ஸ்ரீ தத்தாத்ரேயர் தான்
என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஒரு அவதார புருஷர்.
விளக்கம்:2
தன்னுடை 24 ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லும்
இந்த கீதையின் சில பகுதிகள் இன்றைய சமூகத்துக்கும்,
அறிவியலுக்கும், சூழ்நிலைகளுக்கும் பொருந்தாமல்
இருப்பதைப் பார்க்க முடியும்.
இதைச் சிலர் எனக்கு மின்னஞ்சலில்
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இங்கே தரப்பட்டிருப்பவை
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டன என்பதைக்
கவனத்தில்கொண்டு, நமக்குத் தேவையான அவற்றின்
சாராம்சத்தை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை மனதில் கொண்டு மேற்கொண்டு வாசிக்கவும்.