இது நவராத்திரி வாரம்.
“நவராத்திரியைப் பற்றி
ஏதாவது கிளறுங்களேன்” -
“நவராத்திரியைப் பற்றி
ஏதாவது கிளறுங்களேன்” -
இது அன்பு மனைவியின்
வேண்டுகோள்.
அதைக் கட்டளையாக மதித்து,
இந்தப் பகுதி
எழுதப்படுகிறது.
நவராத்திரியைப் பற்றி என் சிறு வயது
அனுபவங்களைச் சொல்ல
வேண்டுமென்றால்
உங்களை 65 ஆண்டுகளுக்குப் பின்னால்
கூட்டிச்செல்ல வேண்டும்.
flashback
தானே? உண்மைதான்.
ஆனால் அது பழகிப்போன
வார்த்தை.
புதிதாக இப்போது பேசப்படும் வார்த்தை
time travel - காலத்தின்
வழியே பயணம்.
நாமும் time
travel பண்ணப்போகிறோம். —
பின்னோக்கி.
காலம் 1936 - 1947 (எனக்கு 5-16
வயது)
இறங்கிய இடம்: திருநெல்வேலி டவுன்,
தெப்பக்
குளத் தெரு. 147 வீடுகள் கொண்ட
ஒரு அக்ரஹாரம்.
ஒட்டினாற்போல் வீடுகள்.
ஒட்டினாற்போல் வீடுகள்.
privacy
என்ற வார்த்தைக்கு ‘என்ன விலை?’
என்று கேட்கும் ‘நல்ல மனிதர்கள்’.
யார் வீட்டில் என்ன விசேஷம்
என்றாலும் பசங்களுக்குப் பிரத்யேக
அழைப்பு கிடையாது.
free for all தான்.
என் வயதுப் பசங்கள், ஆவலுடன்
எதிர்பார்க்கும் வருடாந்திரப் பண்டிகைகள்
நான்கு. அவை:
ராமநவமி,அரசப் பிரதக்ஷிணம்,
நான்கு. அவை:
ராமநவமி,அரசப் பிரதக்ஷிணம்,
மார்கழி மாத பஜனை, நவராத்திரி.
அப்படி என்ன விசேஷம்?