"காடு, மலை, வனாந்திரம்,
ஏழு கடல்களைத் தாண்டி
கதாநாயகன் கதாநாயகியை
அரக்கனிடமிருந்து
மீட்கச் சென்றான்"
என்று பெரிய எழுத்து மதனகாமராஜன்
கதைகளில்
படித்திருக்கிறோம்.
நாங்களும் அதே மாதிரி, விமானம்,
கார், விசைப்படகு,
காட்டில் நடை, தோணிச் சவாரி
என்று கஷ்டப்பட்டு எங்கள்
லாட்ஜை
அடைந்ததைப்
பற்றி எழுதியிருந்தேன்.
ஒரு வித்தியாசம் நாங்கள்
கதாநாயகி யாரையும்
தேடிப் போகவில்லை.
அமேசான் மழைக் காடுகளில்
2 இரவுகள் 3 நாட்கள் தங்கி,
நம்முடைய ரிஷிகள் காட்டில்
எப்படி
வாழ்ந்தார்கள் என்பதைப்
பார்க்க ஆவலுடன் சென்றோம்.
நாங்கள்
தங்கியிருந்த லாட்ஜின் பெயர்
Sandoval Lake Lodge -
பெயரில் இருக்கிறபடி Sandoval
என்ற ஒரு பெரிய ஏரிக் கரையில்
அநேகமாக எல்லாப் பயண
விடுதிகளும்
இந்த ஏரிக் கரையில்தான் இருக்கின்றன.
நாகரிகத்திலிருந்து
தூர விலகி
நடுக் காட்டில் இருக்கும் சுவையான
அனுபவத்தைக் கொடுப்பதற்காக
இந்த
ஏற்பாடு. பயணிகளுக்குத்
தேவையான எல்லாப் பொருள்களும்
homeland இலிருந்துதான்
கொண்டுவர வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் வரும்
மின்சாரத்தைத் தவிர மற்ற எந்த
வசதியிலும் குறைவில்லை.
2 இரவுகள்,3 நாட்கள்
போனதே தெரியவில்லை.
மழை தொடர்ந்து பெய்தாலும்
செலவழித்த நேரத்தில்
பெரும் பகுதி, வெளிப்புறத்தில்தான்.
அதற்குத்தானே
வந்திருக்கிறோம்.