Sunday, February 12, 2012

குறட்டை ஜோஸியம்

குறட்டை: இதைப் பற்றி எல்லோருக்கும் 
தெரியும். எல்லோருக்கும் நிறைய 
கேள்வி ஞானம்உண்டு.
ஜோஸியம் என்பது வாழ்க்கையோடு 
ஊறிப்போன சமாசாரம். 
ஆனால், இது என்ன 
குறட்டை ஜோஸியம்?”

விளக்கம் ...    பின்னால்.

இதோ ஒரு காட்சி.
ஒரு விருந்தாளி தன் நண்பர் வீட்டில் 
உணவு அருந்தி நண்பர் அறையிலேயே 
இரவு படுத்து உறங்குகிறார்.  
மறுநாள் காலையில் விருந்தாளி - நண்பர் 
உரையாடல் பின்வருமாறு:
நண்பர் - Good Morning நன்றாகத் 
தூங்கினீர்களா?
விருந்தாளி  - சார், ஒரு கேள்வி.
நண்பர் - கேள்விக்குக் கேள்வியா
பேஷ், பேஷ், சொல்லுங்கள்.
விருந்தாளி  - சார், நீங்கள் 
என்ன ஒரு குறட்டைவாதியா?
நண்பர் - என்ன! புதுசா இருக்கே! 
ஏதோ நான் ஒரு தீவிரவாதி 
என்பது மாதிரி                              
கேள்வி கேட்கிறீர்களே?
விருந்தாளி -கோபித்துக்கொள்ளாதீர்கள்! 
நேற்று நீங்கள் போட்ட குறட்டைச்                                             
சத்தத்தில் தூக்கமே வரவில்லை 
அதைத்தான் சொன்னேன்.
நண்பர்- நானா! குறட்டையா
சான்ஸே கிடையாது. நீங்கள் 
தூங்காததற்கு                                
வேறு காரணம் இருக்கும். 
உடனே டாக்டரிடம் போய்                                         
விசாரியுங்கள்.
இந்த உரையாடலில், நண்பர்-விருந்தாளிக்குப் 
பதிலாக,கணவன்-மனைவி;தகப்பன் -மகன் 
என்று வைத்துக்கொள்ளலாம். 
இது அநேகமாக தினசரி எங்கேயாவது 
நடக்கும் சர்வ சாதாரணமான நிகழ்ச்சி.