Tuesday, May 07, 2013

அதிகம் தெரிந்திராத மாமணிகளில் ஒருவர்



உலகத்தில் உள்ள ஒவ்வொரு 
நாட்டிலும் வெவ்வேறு 
துறைகளில் மேதைகளும்
அறிவாளிகளும்,படைப்பாளிகளும் இருக்கிறார்கள்- 
இருந்துகொண்டும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரைத்தான் 
மக்கள் celebritiesஆக ஆக்கி
பேசி, எழுதி வருகிறார்கள். 
அந்த celebrities statusஐ 
விரும்பாமல்
"தான் உண்டு 
தன் வேலை உண்டு" 
என்று இருந்துகொண்டு 
அதே சமயத்தில் 
தாங்கள் தேர்தெடுத்துக்கொண்ட துறைக்காகப் பாடுபட்டு 
வாழும் மாமணிகள் 
நிறைய பேர் இருந்தார்கள்
இன்னும் இருக்கிறார்கள். 

அந்த மாமணிகளில் 
ஒருவர்தான் சமீபத்தில் 
வைகுண்ட பிராப்தி அடைந்த 
நல்லூர் அரசாணிபாலை 
ஸ்ரீ.உ.வே.
கோபாலதேசிகாசார்யர் 
ஸ்வாமிகள் 
(மீமாஸ சிரோமணி) 
(1914-2013). 














அவர் நிச்சயம் வைகுண்டத்திற்குத்
தான் சென்றிருப்பார். 
மகா பாபியான அஜாமேளன் 
கடைசி காலத்தில் 
"நாராயண" 
என்று சொன்னதனால் 
அவனுக்கு வைகுண்ட பிராப்தி 
கிடைத்தது என்று புராணிகர்கள் 
சொல்லிவருகிறார்கள். 
அப்படியிருக்க, வாழ்ந்த 
100 ஆண்டுகளிலும் 
கடைசி மூச்சு இருக்கும்வரை 
"ராமா, கிருஷ்ணாபெருமாளே" 
என்று சொல்லிவந்த 
பெரியவர் வேறு எங்கு 
சென்றிருப்பார்?

யார் இவர்? இவர் எதில் 
பாண்டித்தியம் அடைந்திருக்கிறார்
இவர் என்ன சாதித்திருக்கிறார்?