Monday, August 06, 2012

தெரிந்த அனுமார்-தெரிந்திருக்க வாய்ப்பில்லாத கதை

எங்கேயும்,எப்போதும்,
எல்லா இந்துக்களாலும்
(சைவ,வைஷ்ணவ,சாக்த
வேறு பாடு இல்லாமல்)
துதிக்கப்படும்  ஒரே
Super Star,Super Man,
Super Hero,Ultimate Star
நம்முடைய அனுமார் தான் 
என்பதில், யாருக்கும் கருத்து
வேறு பாடு இருக்காது என்று
அடித்து சொல்லலாம்.













குழந்தை பருவத்தில் சூரியனைப்
பிடிக்க முயற்சி செய்தது,
இந்திரனினால் அடிக்கப்பட்டு,
மயங்கி கிடந்தது,
வாயு கோபம் அடைந்து உலகோரை
மூச்சு விடாமல் திணர செய்தது,
மும்மூர்த்திகளும் ,மற்ற தேவர்களும் 
தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும்
அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர் 
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும்,அவர் பெரியவரான போது,
சுக்ரீவருக்கு மந்திரியானது,
ராம,லக்ஷ்மணரை சந்தித்தது,
ராமருக்காக சீதையை தேட
ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து
சூடாமணியை வாங்கியது,
ராவணனை சந்தித்து அறிவுரை
வழங்கியது,இலங்கையை எரித்தது-
என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள்
இருக்க வாய்ப்பில்லை.
ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு ,
ராமாயண கதை படித்தவர்களுக்கு
நன்றாகவே தெரியும்.

அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு
சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா,
என்று நினைக்க தோன்றும்.

ஆனால்,அனுமாருக்கு அந்த மாதிரி 
எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது.
அதனால் தான், அவருடைய நல்ல
பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும்
வணங்கி வருகிறோம்.

எப்படி இவரால்,அதுவும் 
ஒரு குரங்காக இருந்து
கொண்டு, இவ்வளவு சாதனைகள் 
செய்ய முடிந்தது?

அதற்கு ஒரே காரணம் தான் 
இருக்க முடியும்.
அவர் தேவாம்சம் பெற்றவராக
இருந்திருக்க வேண்டும்.
சாதரண தேவருடைய அம்சமாக
இருக்க வாய்ப்பில்லை.

பின் யாருடைய அம்சம் இவர்?

சாஷாத் பரமேஸ்வரனுடைய 
அம்சம்.

அது என்ன கதை?