தவறு-என்கிறது,
எல்லா நாடுகளிலும் சொல்லப்படும்
கர்ண பரம்பறை கதைகள்.
அதற்கான ஒரு திருஷ்டாந்த கதை……..
ஒரு ஊரில்,ஒரு ராஜா இருந்தார்.
அவருக்கு நல்ல ஆலோசனை சொல்ல,
எப்போதும், அவருடன் நிறைய
முதிய அறிவாளிகள் இருந்தனர்.
ராஜ்யம் செழிப்பாக இருந்தது.
மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
அந்த ராஜாவுக்கு ஒரு மகன்.
அவனுக்கு அவன் அப்பாவுடன்
இருக்கும் முதியோர்களை
கண்டாலே பிடிக்கவில்லை.
"இந்த கிழங்கள் எல்லாம்
பழைய கொள்கைகளை
கடைப்பிடித்து நாட்டை
கெடுக்கின்றனர்.
நான் பதவிக்கு வந்தவுடன்
இவர்களுக்கு ஒரு வழி பண்ணுகிறேன் "
என்று கருவிக் கொண்டிருந்தான்.
ராஜா காலமானார்.
பையன் ராஜாவானான்.
முதல் வேலையாக,
எல்லா முதியோர்களும்
நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
என்று உத்தரவு போட்டான்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
"முதுமை கெட்டது-இளமை நல்லது"
என்ற மன நிலையில் இருந்த
ராஜா தன் முடிவை மாற்றிக்
கொள்ளவில்லை.
எல்லா முதியோர்களும் நாட்டை
விட்டு வெளியேறினார்கள்.
ராஜா தன்னைச் சுற்றி ஒரு இளைஞர்
கூட்டத்தை சேர்த்துக் கொண்டான்.
எங்கும்,அழுகை குரல்-
ஒரு வீட்டைத் தவிர..