Tuesday, March 12, 2013

கேள்வியும் நானே - பதிலும் நானே. ஆதி சங்கரர்



வார, மாதப் பத்திரிகைகளில் 
பாப்புலரான பகுதி "கேள்வி - பதில்".
இதில் முதல் இடம் வகித்தவர் - 
Babu Rao Patel. (Film India). 
தமிழில் பிரபலமானவர்கள் - 
தமிழ்வாணன் (கல்கண்டு)
சோ (துக்ளக்), அரசு (குமுதம்)
தராசு (கல்கி).
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னோடிகள், உபநிஷத்துகளை 
இயற்றிய ரிஷிகள். பெரும்பான்மையானவை
கேள்வி - பதில் வடிவத்திலேயே உருவாக்கப்பட்டவை. 
மகாபாரதத்தில் வரும் யக்ஷ-பிரச்னம் (பிரச்னம் என்றால் கேள்வி) 
ரொம்பவே பிரசித்தம். 
கேள்வி கேட்டால்தான் 
விடை பிறக்கும், தெளிவு உண்டாகும்’ 
என்ற சித்தாந்தத்தை நம் பெரியோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். 
பகவத் கீதை ஒரு சான்று.
"கேள்வி - பதில்" படைப்புகளில், அவ்வளவாக, பிரபலமாகாத ஒன்று.
பிரச்னோத்தர - ரத்ன மாலிகை.’ 
இதை இயற்றியவர் ஆதிசங்கரர் 
என்று பேசப்படுகிற 
ஸ்ரீ சங்கராசாரியர் அவர்கள்.














சங்கர பகவத் பாதர் என்று 
அழைக்கப்படும் சங்கராச்சாரியாரைப் பற்றித் தெரியாத இந்து இருக்க முடியாது.
அத்வைத சித்தாந்தத்தின் குருவான 
இவர் மக்களின் மூட நம்பிக்கைகளையும் அறியாமையையும் போக்க 
அநேக நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். 32 வயதே இருந்த 
இவர் எழுதாத பாஷ்யமோ
கடவுள் மேல் எழுதாத 
ஸ்தோத்திரமோ இல்லை. 
இந்தியா முழுவதும் நடந்து 
மடங்களை ஸ்தாபித்து இந்து 
சநாதன மதத்தைப் பரப்பினார். 
"ஷண்மதம்" என்ற 
6வகையான பூஜை கடவுள்களையும் ஏற்படுத்தினார்.
அந்த மகான் மக்கள் வளம் பெற ஆங்கிலத்தில் சொல்வார்களே - 
அதே மாதிரி One Liner என்ற 
ஒரே வாக்கியத்தில் 
கேள்வியையும் 
அதற்கான பதிலையும் 
சொல்லியிருக்கிறார்.
மக்கள் எப்படி வாழ வேண்டும் 
என்ற கோட்பாடுகளை எளிய 
முறையில் விளக்கியிருக்கிறார். 
இந்தச் சிறிய நூல் மூலம் 
எல்லோரும் நலம்பெற அதிலிருந்து 
சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மகிழ்ச்சி அடைகிறேன்.