2012ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.
வழக்கமாக, ஜோஸியர்கள், புது வருஷ பலன்
சொல்லும்போது, மழை, வெள்ளம், பூகம்பம்,
விவசாய வளர்ச்சி, மக்களின் ஷேம லாபங்கள் —
இவற்றைப் பற்றிதான் ஆருடம் சொல்வார்கள்.
ஆனால், 2012ஆம் ஆண்டு சமாச்சாரமே வேறு.
கடந்த நான்கு வருஷங்களாக படித்தவர்கள்,
விஞ்ஞானிகள் என்று வித்தியாசம் இல்லாமல்
எல்லோரும் இந்த உலகம் டிசம்பர் 21, 2012இல்
முடிவுக்கு வந்துவிடும் என்று எழுதி, பேசி,
பயமுறுத்தி வந்திருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய ஆதாரம்,
‘மாயன்’ காலண்டர் 2012இல் முடிவடைகிறது.
இதற்கு முன்னால் பல தடவை
உலக அழிவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள்
எழுதியிருக்கிறார்கள்.
உலகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இந்த ஆருடமும் அதே மாதிரிதான்
என்று நம்பிச் செயல்படுவோம்.
கவிஞர் கண்ணாதாசன் எழுதியபடி
“என்னதான் நடக்கும், நடக்கட்டுமே .......
தலைவன் இருக்கிறான் மயங்காதே”
இதை நினைவுகூர்ந்து தெய்வத்தின் மேல்
பாரத்தைப் போட்டுவிட்டு
நம் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.
என் அருமை நண்பர்களுக்கும்
அவர்கள் குடும்பத்தாருக்கும்
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
“எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்”
“எல்லோரும் சுகமாக இருக்கட்டும்”
“எல்லோரும் நோய் இல்லாமல் இருக்கட்டும்”