சங்க இலக்கியம் எனப்படுவது கி.மு.300-கி.பி.700 காலப் பகுதியில்
எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.
473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டது.
பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டவர்களும்,
பெண்களும், மன்னர்களும் இவற்றை எழுதியுள்ளனர்.
தமிழ் நூல்கள் பெரும் பிரிவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,
பதினெண் மேல்கணக்கு நூல்கள் ஆகும்.
ஐந்தோ அல்ல அதற்குக் குறைந்தோ அடிகளைக் கொண்டு
அமையப்பெற்றவை கீழ்கணக்கு நூல்கள்.
அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட நூல்கள்,
மேல்கணக்கு நூல்கள்.
கீழ்க்கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும்,
நீதிபோதனைகளையும் கூறுபவை.
உதாரணங்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது,
இனியவை நாற்பது, ஐந்திணை, ஆசாரகோவை, பழமொழி...
மொத்தம் 18.
பதினெண் மேல்கணக்கு நூல்கள்:
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.
தொகை என்றால் பல்வேறு காலகட்டங்களில்
பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களைத்
தொகுத்து ஒரு நூலாக்குவது.
இப்படிமேற்சொன்ன நூல் முறையில்
பதினெண் மேல்கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட
தொகை நூல்கள் எட்டு.
இந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.