Monday, December 19, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள் – பகுதி3 (இறுதி)

என்னுடைய பதினாறாவது ஆசிரியர் மீன்


தூண்டிலில் வைக்கப்பட்டிருக்கும் 
உணவின் சுவையை நாடிச் சென்று
மீன் அந்தத் தூண்டிலில் சிக்கி இறக்கும்.

புத்தியில்லாத மனிதன், மீனைப் போல்
தன்னுடைய நாக்கைக் கட்டுப்படுத்தாமல்
கண்டகண்ட உணவுப் பொருள்களைச் 
சாப்பிட்டுத் தன் அழிவைத் தேடிக் கொள்கிறான். 
மற்ற இந்திரியங்களை வென்ற மனிதன் நாக்கை 
ஜெயிக்காத வரையில் யோகியாக மாட்டான். 
சுவையை வென்றால் எல்லாவற்றையும் 
வெல்லலாம்.
நாக்கையும் சுவையையும் கட்டுப்படுத்த வேண்டும் 
என்ற பாடத்தை மீனிடமிருந்து 
நான் கற்றுக் கொண்டேன்.