Monday, April 09, 2012

பொறாமை கொடிது - ஒரு திருஷ்டாந்தக் கதை


பொறாமைக்கு க்ரியா அகராதி 
கொடுக்கும் விளக்கம்: 
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் 
கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் 
ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக்குறை.’ 
ஆங்கிலத்தில் envy, jealousy என்று 
சொல்வார்கள். 
கிறிஸ்துவர்கள் கருதும் 
‘deadly sins’ listல் 
envyக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. 
பொறாமைப் பிடித்தவனுக்குத் 
தண்டனை ஐஸ் கட்டித் தண்ணீரில் 
மூழ்கடிப்பது.’ (Freezing water)

வள்ளுவர், ‘அழுக்காறாமைஎன்று 
பொறாமையைப் பற்றி  
10 குறள்கள் இயற்றியுள்ளார்.


அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்லை.

பொறாமைப் பிடித்தவன் ஒருபோதும் 
மகானாக ஆவதில்லை. 
பொறாமையில்லாத 
மனதுடையவர்கள் மகானாக 
ஆகாமல் இருந்ததில்லை. 


இதை விளக்க ஒரு சிறிய கதை.