Friday, January 04, 2013

இன்கா தலைநகரில் கொண்டாடிய ‘வருஷத்திற்கு ஒரு நாள்’



முதலில் இரண்டு விளக்கங்கள்:
வருஷத்திற்கு ஒரு நாள்
இந்துக்கள் வீட்டில் பண்டிகைகளுக்குப் பஞ்சமிருக்காது. என் வீடும், அதற்கு விலக்கல்ல. பிள்ளையார் சதுர்த்தி
சரஸ்வதி பூஜை, மகர சங்கராந்தி... 
இப்படிப் பல பல. எல்லாவற்றிற்கும் 
பொது பூஜை, நைய்வேத்யம். 
என் அம்மாவும் ஒவ்வொரு 
பண்டிகைக்கும் ஏற்ற உணவுப் பொருள்களை நிவேதனத்திற்காகத் தயார்பண்ணுவார்கள்.
சின்ன வயதில் - (தப்பு, தப்பு) 
2003வரை (என் 72 வயதுவரை) 
ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் 
பதார்த்தங்கள் தயாரானவுடன் அவற்றை taste பண்ண, தொட முயற்சிப்பேன். 
நானும் என் அம்மாவும் வழக்கமாகப் பேசிக்கொள்ளும் டயலாக்.
அம்மா: "சனியனே, கட்டேல போறவனே (வயதான பிறகு, இவையெல்லாம் dropped) பிராமணனாகப் பிறந்ததற்கு உருப்படியாக ஏதாவது செய். 
இன்றைக்கு வருஷத்திற்கு ஒரு நாள்போய்க் குளித்துவிட்டு, சுவாமிக்கு 
இரண்டு பூ போட்டுவிட்டு
அப்புறம் வந்து கொட்டிக்கோ." 
(இதுவும் later yearல் dropped).
நான்: "ஏன், அம்மா, எல்லோரும் கட்டையிலேதானே போவா
அதென்ன, வருஷத்திற்கு ஒரு நாள். 
எல்லா நாளும் வருஷத்தில் 
ஒரு நாள் தானே. இன்றைய நாள்
இனிமே அடுத்த வருஷம்தானே 
வரப் போகிறது?" 
அம்மா: "அதிகப்பிரசங்கித்தனம்..."
பிறகு குளித்துவிட்டுப் பூஜை செய்வேன். ஆசையோடு ஒவ்வொரு பட்சணமாகக் கொடுப்பாள். 
( I miss those glorious moments.)
விதண்டாவாதத்திற்காகச் சொன்னாலும் யோசித்துப்பார்த்ததில், 
வருஷத்திற்கு ஒரு நாள்என்ற அடைமொழி சில விசேஷ நாட்களுக்குத்தான் 
பொருந்தும். எல்லோரும் சாப்பிட்டாலும் 
சில பேரைத்தானே சாப்பாட்டு ராமன்என்கிறோம்.
ஆக, இந்துக்கள் வாழ்க்கை என்று இல்லாமல் ஒவ்வொரு மதத்திலும் 
சில விசேஷ நாள்கள் 
வருஷத்திற்கு ஒரு நாள்என்ற 
அடைமொழியைப் பெறுகின்றன.
இந்தச் சில பல  
வருஷத்திற்கு ஒரு நாள்களில் 
ஒரே ஒரு பண்டிகை, விசேஷம்
event மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடிய பண்டிகையாக 
இருந்த நிலைமை மாறி, இன்றைக்கு உலகத்தினர் எல்லோராலும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
சஸ்பென்ஸ் போதும் என்று நினைக்கிறேன். அதுதான்- New Year Eve /புது வருஷம் ஆரம்பத்தைக் கொண்டாடுவது. 
நான் கொண்டாடிய 
வருஷத்திற்கு ஒரு நாள்’. 
2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி.
இரண்டாவது விளக்கம்.
இன்கா தலைநகர்
நான் என் குடும்பத்தோடு
New Year Eveயும் புது வருஷ ஆரம்பத்தையும் கொண்டாடியது, 
இன்கா தலைநகரில்.
இதென்ன,கேள்விப்படாதப் பெயராக இருக்கிறது என்று சில பேர் நினைக்கலாம். ரோம, கிரேக்க, எகிப்திய, குப்த
விஜய நகர சாம்ராஜ்யங்கள் போல் 
இன்கா சாம்ராஜ்யமும் பிரபலமான 
ஒரு சாம்ராஜ்யம்.
இன்கா (Incas) என்ற பிரிவினர் ஸ்தாபித்த இந்த சாம்ராஜ்யம் 13/14ஆம் நூற்றாண்டில் தென்அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 
இதனுடைய மையம் தற்போதைய 
பெரு நாடு. வடக்கே, equator, தெற்கே, பொலிவியா, சில்லி, அர்ஜண்டைனா 
என்று ஒரு பெரிய சாம்ராஜ்யம். 
இதன் தலைநகரம் பெரு நாட்டின் 
2ஆவது நகரமான, குஸ்கோ (Cusco). 15ஆம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டினர் படையெடுத்து, இன்கா கலாச்சாரத்தை முழுவதுமாக அழித்துவிட்டுத் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். 
சென்ற நூற்றாண்டில் 1911ஆம் ஆண்டு  Bingham என்ற அமெரிக்க விஞ்ஞானி 
இந்த உன்னதமான இன்கா காலச்சாரத்தையும் அவர்கள் சாதனைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.
விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். இந்த வருஷம் புது வருஷத்தைக் குடும்பத்தோடு நான் கொண்டாடியது குஸ்கோ நகரில். இது தற்போதைய பெரு நாட்டின், 2ஆவது நகரம் 
(லீமா - பெரு நாட்டின் தலைநகரம்)- முந்தைய இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகர். 
நான், எப்படி, அங்கே
கேள்விகளுக்கு விடை இதோ.