மகாபாரதக் கதையின் Hero யார்
என்று கேட்டால், விதவிதமான பதில்கள்
கிடைக்கும் பீஷ்மர், அர்சுனன், பீமன்,
கர்ணன் என்று ஆளுக்கு ஒரு பெயரைச்
சொல்வார்கள்.
ஆனால் காவியத்தை நன்றாகப் படித்து,
ரசித்து, அதைப் பற்றிச் சிந்தித்தவர்களுக்கு
ஒரே ஒரு Heroதான் மனதில் தோன்றுவார்.
யார் அவர்?
சாக்ஷாத் கிருஷ்ண பரமாத்மாதான்.
செல்லமாக, மாயக் கண்ணன்
என்றும் அவரை அழைப்பதுண்டு.
மகாபாரதக் கதையின் முடிவில் வருவது
பாரதப் போர். 18 நாள் யுத்தம்.
வெற்றி பாண்டவர்களுக்கு என்பது
தெரிந்த விஷயம்.
எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள்,
கெளரவர்கள் பக்கத்தில் —
பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன்,
ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்.
இவர்களை எப்படிப் பாண்டவர்கள்
வென்றார்கள்?
ஒவ்வொருவருடைய வீழ்ச்சிக்குப் பின்னாலும்
கண்ணனின் ‘வேலை’ இருந்திருக்கிறது.
கண்ணன் இல்லாவிட்டால் பாண்டவர்கள்
வெற்றி பெற்றிருக்க முடியாது.
இதோ ஒரு கேள்வி:
கீழ்க்கண்ட வீரர்களில், யாருடைய
வீழ்ச்சிக்காகக் கண்ணன் தீட்டிய திட்டம்,
நெத்தியடி பிளான் என்ற பாராட்டைப் பெறும்?
1) பீஷ்மர் 2) துரோணர் 3) கர்ணன்
4) ஜயத்ரதன் 5) துரியோதனன் 6) விதுரர்