அந்தகக் கவி வீரராகவ முதலியார்
எத்தனையோ புலவர்கள் இந்த நாட்டுக்கும் தமிழுக்கும்
சேவை செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இப்பொழுது இல்லை.
அவர்கள் பாடிக் கொடுத்த பாடல்கள்தான்
சிரஞ்சீவியாக இன்னும் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன.
தமிழ் தெரிந்த பெருபான்மையோருக்கு
திருவள்ளுவர், கம்பர், ஔவையார், அருணகிரிநாதர்,
பட்டினத்தார், ராமலிங்க அடிகள், காளமேகப் புலவர்...
இவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும்.
ஆனால், எத்தனை பேருக்கு தெரியும்,
தமிழ் புலவர்கள் நூற்றுக்கும் மேலே
இருந்திருக்கிறார்கள் என்று.
இவர்களில் பெரும்பான்மையோர்
வறுமையினால் வாடி, கஷ்டப்பட்டு,
வயிற்றுப்பிழைப்புக்காக
அரசர்களையும், தனவந்தர்களையும் புகழ்ந்துப்
பாடி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.
இதில் பாராட்ட வேண்டிய விஷயம்
என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும்
இந்தப் புலவர்கள் தங்கள் நகைச்சுவை
உணர்வை (sense of humor)
விட்டுக்கொடுத்ததில்லை.
அதிகமாகப் பரிச்சயம் இல்லாத
சில புலவர்களைப் பற்றியும் அவர்கள் படைத்த
சில பாட்டுகளைப் பற்றியும்
சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாமே!
இதோ, முதலில்
அந்தகக் கவி வீரராகவ முதலியார்.