Tuesday, February 26, 2013

உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டம் எது?



இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள்: ­ 
D'Ancona & Pflaum என்ற
சிக்காகோ நகரில் உள்ள நிறுவனம். 
கேட்கப்பட்ட வருஷம் 1995. 
கேள்வி கேட்கப்பட்டவர்கள் ­ 
6 இலிருந்து 12 வயதுவரை 
உள்ள சிறுவர் / சிறுமியர்கள். 
இதை ஒரு கட்டுரைப் போட்டியாக நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் கற்பனைக்குத் தோன்றிய எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். 
ஒரு நிபந்தனையும் கிடையாது” 
என்று சொல்லப்பட்டது.
ஒரு தமாஷுக்காக ஆரம்பிக்கப்பட்ட 
இந்தக் கட்டுரைப் போட்டி தமாஷான 
பதில்களைத்தான் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்த்தது. உதாரணத்திற்கு
தெருவில் அசுத்தம் செய்தவர்களைத் தண்டிக்கச் சட்டம் வரவேண்டும்” 
என்பது போன்ற பதில்களை எதிர்பார்த்தார்கள்.
கட்டுரைகளைப் பரிசீலித்தபோது 
பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையும் இந்தப் போட்டியைத் தமாஷாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பெரிய அதிர்ச்சி. குழந்தைகளின் பதில்களிலிருந்து அவர்களுடைய உணர்வுகள் எப்படி சூழ்நிலையினால் பாதித்திருக்கிறது 
என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது. அவர்கள் சொன்ன கருத்துகள் ஆக்கபூர்வமாக இருந்தன.

உதாரணத்திற்கு சில: