Tuesday, March 20, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 2



4. பாதஸேவனம் - திருவடி தொழல்

நான்காவது நிலை. திருவடி தொழல். 
இனியவை நாற்பது என்பது பதினெண் 
கீழ்கணக்கில் உள்ள ஒரு நூல். 
அதில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் 
இறைவனுடைய திருவடியைத் தொழுவது 
ஒரு இனிமையான செயல் என்று சொல்கிறது.

கண் மூன்ற உடையான் தாள் 
சேர்தல் கடிது இனிதே
தொல் மான் துழாய் மாலை யாளைத் 
தொழல் இனிதே
முத்துறப் பேணிமுகம் நான்கு 
உடையானைச் சென்று அமர்ந்து 
ஏத்தல் இனிது.