Monday, April 01, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி3


அலைகள் தொடர்கின்றன... 
நிறைய அனுபவங்கள்
பல வித்வான்கள் கச்சேரிகளில். 
சொல்லிக்கொண்டே போகலாம். 









M.L.Vasanthakumari














MLVயின் முதல் கச்சேரி 
1948  ஜனவரி 30ஆம் தேதி 
5.30 pm - 6.00. 
திருவையாறு ரிலே. 
யார் இவர்கள்
என்ன அருமையாகப் பாடுகிறார்கள் ,
என்ற வியப்போடு ரேடியோவை மூடினோம். 
2 நிமிடங்களில் செய்திகள் வந்தன. 
மஹாத்மா காந்தி சுட்டுக் 
கொல்லப்பட்டார்  என்ற செய்தி. 
திருவையாறு கச்சேரிகள் நிறுத்தப்பட்டன. 
இது  ஆர்டிஸ்டுக்கு அபசகுனமோ என்று 
நினைக்க தோன்றியது...
ஆனால்,தியாகதராஜ சுவாமிகளின்
கிருபையால்,MLV, புகழ் 
உச்சிக்கே  சென்றார்.
எம்.எல்.வி அவர்கள்,சினிமா 
பின் பாடகி யாகவும் சிறந்து விளங்கினார் 
என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால்,எந்த கச்சேரியுலும்,
சினிமா பாடல்களை பாட மாட்டார்.
(சின்னஞ் சிறு கிளியே..தவிர)

ரசிகர்களின் தொந்தரவை நாசுக்காக
சமாளிப்பார்கள்." சினிமாவில் நிறைய
வாத்தியங்களோடு பாடுவேன்.அப்ப தான்
பாட்டு சோபிக்கும்.இந்கே அப்படி ஏற்பாடு
செய்தால் கட்டாயம் பாடுகிறேன்." என்பார்.
பிறகு எவன் கேட்பான்?
சினிமா வேறு..கச்சேரி வேறு என்பதில் 
ஒரு தீர்மானத்தோடு இருந்தவர்.
அதிகமான கச்சேரிகள் பண்ணியவர்,
இவர் தான்.