Friday, February 15, 2013

தத்துவ சாஸ்திரமும் விஞ்ஞானமும் மதமும் ஒன்றாகச் செயல்பட முடியாதா?



தத்துவம் (Philosophy) 
என்றால் என்ன?
விஞ்ஞானம் (Science), 
மதம்(Theology) - 
இவற்றிலிருந்து எப்படி 
மாறுபட்டிருக்கிறது?

இதோ ஒரு குட்டிக் கதை.

ஒரு சிறு ஊர். ஒரு வீட்டின் 
தாழ்வாரத்தில் மூன்று நபர்கள். 
தனித்தனி நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். 
ஒருவர் விஞ்ஞானி (Scientist). இன்னொருவர் ஒரு தத்துவ மேதை (Philosopher). மூன்றாவது நபர் 
ஒரு பாதிரியார் (Priest).

30 அடி தூரத்தில் 
ஒரு கோழி பாதையைக் 
கடந்து சென்றுகொண்டிருந்தது. 
மூன்று பேரும் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
விஞ்ஞானி தனக்கு தெரிந்த 
விஞ்ஞானத் திறமைகளையெல்லாம் நினைவுகூர்ந்து அந்தக் கோழியின் அசைவுகளை மனதில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். 
அவர் மூளை சுறுசுறுப்பாக 
வேலைசெய்து
Newton's laws of motion, 
inertia என்ற physics சம்பந்தமான விதிகளின்படி 
கோழியின் அசைவுகளை 
அலசினார். முடிவாக, வியர்வை 
கொட்ட திடீரென்று, "Eureka" - கண்டுபிடித்துவிட்டேன் 
என்று கத்தினார். 
இதற்கிடையில் கோழி பாதையைக் 
கடந்து மறுபுறம் சென்றுவிட்டது.