Monday, November 26, 2012

சாணக்கிய நீதி



சாணக்கியர்’-
என்று சொன்னவுடன்
நம்மில் பலர் மனதில் 
தோன்றுவது
அவருடைய அவிழ்ந்த குடுமியும் 
அவர் எடுத்த சபதமும்தான்.
பாஞ்சாலிசபதத்திற்குப் பிறகு 
வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் - 
சாணக்கிய சபதம்தான்.
கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து
தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது - 
பாஞ்சாலி சபதம். 
நந்தர்களின் ஆட்சியை அழித்து
சந்திரகுப்தரை மன்னராக்கி
குப்தர் பொற்காலத்திற்கு 
அடிகோலியது - 
சாணக்கிய சபதம்’.
சாணக்கியருடைய சபதம் போல்
அவர் எழுதிய அர்த்த சாஸ்திரமும் 
உலகப் பிரசித்தி பெற்றவை.
அர்த்த சாஸ்திரம், ஒரு statecraft 
புத்தகம். 
அதாவது அராசங்கமும் அரசனும் 
எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும் 
என்பதை விளக்கும் நூல்.
இது சரித்திரம் படித்த 
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பல பேருக்குத் தெரிந்திருக்க 
வாய்ப்பில்லாத விஷயம் — 
இதே சாணக்கியர், மனிதனுடைய 
வாழ்வு வளம்பெற, ஒரு நீதி சாஸ்திர 
நூலையும் இயற்றியிருக்கிறார். 
அதுதான் சாணக்கிய நீதி’ என்ற நூல்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் 
வெவ்வேறு சமயங்களிலும் 
பெரிய மஹான்கள்,
மானிடர்கள் நலம்பட
நல்ல கருத்துக்களை
போதித்திருக்கிறார்கள்.
தமிழில் திருக்குறள்
ஒளவையாரின் நல்வழி
மூதுரை ஆகிய நூல்கள்
உலக நீதி போன்றவை 
பிரசித்தம். 
வடமொழி இலக்கியத்தில்,  
சுக்ரநீதி, மனுநீதிவிதுரநீதி 
என்று பல நூல்கள் உள்ளன. 
அவற்றில் சாணக்கிய நீதியும் 
ஒரு சிறந்த நூலாகப் புகழப்படுகிறது. 
இதில், இன்னொரு விஷயம்
மற்ற நீதிகளின் ஆசிரியர்கள் 
புராண, இதிகாச மனிதர்கள். 
ஆனால் சாணக்கியர்
ஒரு சரித்திர கால புருஷர். 
2500 ஆண்டுகளுக்கு 
முன் வாழ்ந்தவர். 
அவரைப் பற்றிய கதைகள்
சரித்திர நிரூபணம் 
இல்லாத கதைகளாக இருந்தாலும்
அவர் வாழ்ந்த காலம்
அவர் ஈட்டிய பணிகள்
அவர் எழுதிய காவிய நூல்கள் 
சரித்திர ஆசிரியர்கள் 
ஏற்றுக்கொண்டவை.
சாணக்கிய நீதியில் என்ன 
நல்ல விஷயங்கள் 
சொல்லப்பட்டிருக்கின்றன
என்பதைப் பார்க்கும் முன் 
அதன் ஆசிரியர், சாணக்கியரைப் 
பற்றிக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்
கொள்வோம்.

கங்கைக் கரை ஓரத்தில் இருக்கும் 
அழகான பாடலிபுத்திர 
(இன்றைய பாட்னா) 
நகரத்தை நோக்கிச் 
சென்றுகொண்டிருக்கிறான் 
ஒரு பிராமணன் அவிழ்ந்த குடுமி
தீட்சயண்யமான கண்கள்
கோபம் கலந்த மிடுக்கு நடை. 
உச்சி வெயில், பசி, களைப்பு.
வழியில், ஒரு புல் குவியல். 
பிராமணன் அதைப் பார்க்காமல்
அதன் மேல் கால் வைக்க,  
தடம்புரண்டு கீழே விழப்போனான். 
சாதாரண மனிதர்கள்
அதைப் பொருட்படுத்தாமல் 
மேலே நடந்துசெல்வார்கள். 
ஆனால், இவன் சாதாரண 
மனிதன் இல்லையே!
கோபம் வந்துவிட்டது. 
கீழே உட்கார்ந்து, ஆழமான 
வேர்களுடன் இருந்த 
அந்தப் புல்குவியலை வேரோடு 
பிடுங்கி, அதற்குத் தீவைத்து
அது சாம்பலாக்கும்வரை 
பொறுமையுடன் காத்திருந்து
பிறகு அந்தச் சாம்பலை 
நீரில் கரைத்துவிட்டுத் தன் 
பயணத்தைத் தொடர்ந்தான்.
யார் அந்தப் பிராமணன்?
அவர்தான், கெளடில்யர்விஷ்ணுகுப்தர் 
என்று அழைக்கப்படும் சாணக்கியர்.. 
எல்லா சாஸ்திரங்களையும் 
கரைத்துக் குடித்தவர். 
அந்தக் காலத்துப் புகழ்வாய்ந்த 
தட்சசீலக் கலாசாலையில் படித்தவர். 
பொருளாதார நிபுணர். 
பிழைப்பைத் தேடி 
பாடலிபுத்திரத்திற்கு வந்தார்
வந்த இடத்தில் 
பெரிய அவமானம். 
பாடலிபுத்திரத்தை 
ஆண்டுவந்தவர்கள் - நந்தர்கள். 
ஒரு நாள் சாணக்கியர், நந்தர்கள் 
அரண்மனைக்குச் சென்றார். 
அங்கே நந்தர்கள் 
அவரை அவமானப்படுத்தி
வெளியே தள்ளினார்கள். 
அப்பொழுது, அவருடைய குடுமி 
அவிழ்ந்து தோளில் புரண்டது.
சாணக்கியருக்கு மகா கோபம். 
கம்பீரமான குரலில் 
"ஏ, நந்தர்களே, என்னையா 
அவமதித்தீர்கள். 
இன்று முதல்
என் முதல் வேலை 
உங்களையும் 
உங்கள் சாம்ராஜ்யத்தையும் 
அடியோடு அழிப்பது தான். 
அதுவரை, இந்த அவிழ்ந்தக் 
குடுமியை மறுபடியும் கட்ட மாட்டேன், 
இது என் சபதம்" என்று கர்ஜித்து 
சபையை விட்டு வெளியேறினார். 
நந்தர்கள் ஆணவத்தினால் 
"ஒரு பிராமணனின் சபதம் 
நம்மை என்ன செய்யும்" 
என்று நையாண்டி செய்தார்கள்.
இதுதான் சாணக்கிய சபதத்தின் 
மூலக் கதை. 
இந்தச் சபதத்தைச் செய்துவிட்டுத் 
திரும்பும் வழியில்தான்
சாணக்கியர் மேலே சொன்ன
புல் சம்ஹாரத்தைசெய்தார்.
இதை, மறைவிடத்திலிருந்து 
ஒரு இளைஞன் பார்த்துக்கொண்டிருந்தான். 
அவனுக்கு ஆச்சரியம் - இந்த மாதிரி 
ஒரு திடச் சித்தம் உள்ள 
மனிதரைப் பார்த்ததில். 
வெளியே வந்து, சாணக்கியரை அணுகி
தன்னை சந்திரகுப்தன்’ 
என்று அறிமுகம்செய்துகொண்டான். 
சாணக்கியர், பரிவுடன் சந்திரகுப்தனைப் 
பார்த்து, "குழந்தாய் நீ ஏன் கவலை 
முகத்துடன் இருக்கிறாய்
உன் கஷ்டத்தை 
என்னிடம் சொல். என்னால் முடிந்த
உதவியைச் செய்கிறேன்" என்றார்.
சந்திரகுப்தன், 
தன் கதையைச் சொல்லலானான்.
"சுவாமி, நான் சர்வார்த்த சித்தி 
என்ற மன்னரின் பேரன். 
என் தாத்தாவிற்கு சுநந்தா தேவி
முரா தேவி என்று 2 மனைவிகள். 
சுநந்தா தேவிக்கு ஒன்பது பிள்ளைகள் - 
நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 
முரா தேவிக்கு ஒரே பையன் - 
என் தகப்பனார். 
எனக்கு 100 சகோதரர்கள். 
நந்தர்கள் பொறாமை காரணமாக 
என்னைத் தவிர எல்லாரையும்
கொன்றுவிட்டார்கள். 
நான் தனியாக இருக்கிறேன். 
வாழ்க்கையே வெறுத்துவிட்டது" 
என்று சொன்னான். 
சாணக்கியர், சந்திரகுப்தனைப்
பார்த்து,
"கவலைப் படாதே, நானும் 
இந்த நந்தர்களால் 
அவமானப்படுத்தப்பட்டவன்தான். 
என்னுடைய சபதத்தை 
உன் மூலம் நிறைவேற்றிக்
கொள்கிறேன். 
இன்று முதல், நீதான் என் சீடன்" 
என்றார்.
எப்படி சாணக்கிய சபதம் 
சந்திரகுப்தன் மூலம் சாணக்கியரால் 
நிறைவேற்றப்பட்டது 
என்பது சரித்திரம்.

நந்தர்களை அழித்து, சந்திரகுப்தனை 
அரசனாக்கினது, 
அவர் செய்த பெரிய சாதனை.
சந்திரகுப்தனுக்காக
 "மாஸ்டர் பிளான்" 
போட்டது இவர்தான். 
அதில் ஒரு சின்ன 
இடைச்செறுகல் ஏற்பட்டது 
என்பது ஒரு சுவாரசியமான கதை. 
"யானைக்கும் அடி சறுக்கும்" 
என்பதற்கான விளக்கம்.
ஆரம்ப காலத்தில் சந்திரகுப்தனுக்கு 
வெற்றி கிடைக்கவில்லை. 
நந்தர்கள் சைனியம் சந்திரகுப்தனைப் 
படுதோல்வி அடையச் செய்தது.
சாணக்கியருக்குக் கவலை. 
ஒற்றர்களை நாலா பக்கம் அனுப்பி 
வேவுபார்க்கச் சொன்னார். 
ஒரு ஒற்றன் பக்கத்து 
கிராமத்திற்குச் சென்றான். 
அங்கு ஒரு தாயார் தன் மகனுக்குச் 
சுடச்சுட சப்பாத்தி தயார்பண்ணிக் 
கொடுத்துக்கொண்டிருந்தாள். 
அந்தப் பையன் சூடான 
சப்பாத்தியை மத்தியிலிருந்து
விண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
சூடு தாங்காமல் கத்தினான். 
அம்மா செல்லக் கோபத்துடன் 
சொன்னாள்.
"நீ ஏன் சந்திரகுப்தன் போர்
செய்வதுபோல் 
சப்பாத்தியைச் சாப்பிடுகிறாய்?" 
என்றாள்.பையன் கேட்டான்,
"அவர் எப்படிப் போர் செய்தார்?" 
என்று.

தாயார் சொன்னாள், 
"சந்திரகுப்தன் தன் யுத்த 
ஏற்பாடுகளில் 
தவறு செய்கிறான் நீ சப்பாத்தி 
சாப்பிடுகிற மாதிரி. 
சூடான சப்பாத்தியைச் 
சாப்பிட வேண்டுமானால் 
முதலில் விளிம்புகளிலிருந்து 
சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். 
பிறகு கொஞ்சம்கொஞ்சமாக 
நடுப்பகுதியை நோக்கிச் சாப்பிட 
முயற்சிபண்ண வேண்டும். 
அதற்குள் நடுப்பகுதி ஆறிப்போய் 
நீ சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும். 
சந்திரகுப்தன், சுற்றியுள்ள நகரங்களை 
முற்றுகையிடாமல் நேரடியாக
நந்தர்களின் மையப் பகுதிகளைத் 
தாக்கித் தோல்வி அடைகிறான். 
வெளிப்புறப் பகுதிகளை வென்று 
தலைநகரத்தை நோக்கிச் சென்றால்
வெற்றி நிச்சயம். 
அப்படிச் செய்யாததனால்தான், 
எப்பொழுதும் அவன் மையப் பகுதியைத் 
தாக்கினாலும் நந்தர்களால் சூழப்பட்டுத் 
தோல்வியைத் தழுவுகிறான்" என்றாள்.
இதைக் கேட்ட ஒற்றன் சாணக்கியரிடம் 
இதைச் சொல்ல, சாணக்கியரும் 
தன் திட்டத்தை மாற்றி 
சந்திரகுப்தனுக்கு வெற்றி 
கிடைக்கும் வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதே மாதிரி திட்டங்கள் தயாரித்து 
கிரேக்கர்களையும் அவர் 
அடக்கி வைத்திருந்தார். 
இந்தச் சமயத்தில்தான்
புகழ்பெற்றஅர்த்த சாஸ்திரத்தை 
எழுதினார். 
ஒரு அரசன் எப்படி ஆள 
வேண்டும் என்பதற்கான
விரிவுரை இந்த நூலாகும். 
"சாணக்கிய தந்திரம்" என்று 
பரவலாக பேசப்படும் சொல்லிற்கு 
உருவகம் கொடுத்தவர் இவர்தான்.

அரசனையும் அரசாங்கத்தையும் 
பற்றி எழுதிய சாணக்கியர்
மக்களை மறக்க வில்லை. 
சாணக்கிய நீதி
சாணக்கிய சூத்திரங்கள் - 
என்ற 2 நூல்கள் மூலம் 
தன் காலத்து மக்கள் 
எப்படித் தங்கள் வாழ்க்கை 
மேம்படச் செயல்பட 
வேண்டும் என்பதை தெளிவாகச் 
சொல்லியிருக்கிறார்.

சாணக்கிய நீதி,
சாணக்கியர் காலத்திய 
மக்களுக்காக எழுதப்பட்டது. 
ஆனால், அந்த நீதி போதனைகள்
இன்றைய தலைமுறைக்கும் 
பொருந்தும் என்று நினைக்கும்போது
சாணக்கியரின் தீர்க்கதரிசனத்தை
பாராட்டித்தான் ஆகவேண்டும்.
அவருடைய சில கருத்துகள் - 
குறிப்பாக பெண்கள் 
வாழ்க்கை முறைகளைப் 
பற்றியும் வர்ணாசிரம 
கோட்பாடுகளை பற்றியும் - 
இன்றைய சமூகத்திற்கு 
ஒத்துவராமல் இருக்கலாம்
மறுபடி, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள 
வேண்டியது இது அவர் 
வாழ்ந்த காலச் சூழ்நிலைக்காக 
எழுதப்பட்டது.

சிறுசிறு கருத்து வேறுபாடுகள் 
இருந்தாலும் இன்னும் கடைபிடிக்கத் 
தகுந்த நீதி நூல் சாணக்கிய நீதி.
இதிலிருந்து சில பகுதிகளை
இப்பொழுது பார்க்கலாம். 
பகுதி முடிவில் சில links 
கொடுத்திருக்கிறேன். 
முழுமையாகஆங்கிலத்தில் 
படிக்க ஆர்வம் உள்ளவர்கள்
அந்த siteகளுக்குச் சென்று படிக்கலாம்.

முதலில் சாணக்கிய சூத்திரத்திலிருந்து 
சில பகுதிகள். 
சூத்திரம் என்பது one liners- 

(ஆத்திச்சுவடி மாதிரி)

1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
2.பணம் இருந்தால் தர்ம 
காரியங்கள் செய்யலாம்.
3.பணத்தினால் நாட்டின் 
சுபிட்சம் பெருகும்.
4. புலனடக்கம் நாட்டின் 
மேன்மையைப் பெரிதாக்கும்.
5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும்.
6.பெரியோர்களுக்குச் சேவை 
செய்தால் பணிவு வளரும்.
7.முதியோர் சேவைதான் 
உண்மையான அறிவு.
8.பாமர ஜனங்களின் கோபம் 
எல்லாக் கோபங்களையும் விட 
மோசமானது.
9.ஒரு சக்கரம் ஒரு வாகனத்தை 
நடத்தி செல்ல முடியாது. 

10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும் 
பிறகே எல்லாக் காரியங்களையும் 
ஆரம்பிக்க வேண்டும்.
11.அதிர்ஷ்டம், கடுமையாக 
உழைப்பவர்களுக்கு 
மட்டும்தான் கிடைக்கும்.
12. அதிர்ஷ்டத்தை மாத்திரம் 
நம்பினவன் ஒருபோதும் 
வெற்றி அடைவதில்லை.
13.உங்களிடம் இருக்கும் 
குறைகளை யாரிடமும் 
சொல்லாதீர்கள்.
14.பொறுமை இல்லாதவனுக்கு 
நிகழ்காலமும் எதிர்காலமும் 
கிடையாது.
15.அளவோடு சாப்பிடுவது 
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
16.வயதான காலத்தில் 
சிறு உபாதைகளையும் 
அலட்சியப்படுத்தாதீர்கள்.
17.திருடுவதைவிடச் சாவது மேல்.
18.பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.
19.பாத்திரமறிந்து தானம்செய்.
20.வயதுக்கேற்ற ஆடை அணி.
21.மேதை, முட்டாள், நண்பன்
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன்
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
22.தாயார்தான் எல்லா குருமார்களைவிடச் 
சிறந்தவள்.
23.முட்டாள் நண்பனைவிட 
புத்திசாலி எதிரி சிறந்தவன்.
24.எதுவும் சாஸ்வதம் இல்லை.
25.அஹிம்ஸைதான் மதத்தின் சின்னம்.
சாணக்கிய நீதி
1.கடவுள் இருப்பிடம் 
கல்லிலோமரக் கட்டையிலோ
மண்ணிலேயோ இல்லை. 
மனிதர்களின் உணர்ச்சிகளிலும் 
(feelings) எண்ணங்களிலும்தான்.
2.எப்படி பூக்களில் நறுமணம் 
இருக்கிறதோ
எண்ணெய் விதைகளில் 
எண்ணெய் இருக்கிறதோ
மரக் கட்டையில் நெருப்பு 
இருக்கிறதோ
பாலில் நெய்யும்
கரும்பில் சர்க்கரையும் 
இருக்கிறதோ
அப்படித்தான் 
கடவுள் நம்முடைய 
உடம்பில் வாசம் செய்கிறார். 
புத்தியுள்ள மனிதன் இதைப் 
புரிந்துகொள்ள வேண்டும்.
3.மனித வாழ்க்கையின் 
முக்கியமான விஷயங்கள்- 
வயது, வேலை
பொருளாதார வசதி
படிப்பு, மரணம் — 
அவன் கருவில் இருக்கும்போதே 
தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.
4.ஒரே ஒரு காரியத்தினால் 
இந்த உலகத்தை 
ஜெயிக்க ஆசைப்பட்டால்
அது முடியும் — 
மற்றவர்களை தூஷணையாகப் 
பேசத் துடிக்கும் உன் நாக்கை 
அடிக்கி வைத்தால் —  
நா காக்க.
5.வெளி தேசத்தில்
உன் அறிவு, உனக்கு நண்பன். 
வீட்டுக்குள், உன் மனைவிதான் 
உன் நண்பன். 
வியாதிஸ்தனுக்கு மருந்துதான் 
நண்பன். 
மரணத்திற்குப் பின் உன் நண்பன் 
நீ செய்த தர்மம்தான்.
6.ஆசைப்பட்டவர்களிடமிருந்து பிரிவு
நெருங்கிய உறவினர்களிடமிருந்து 
அவச் சொற்கள், தீர்க்க முடியாத கடன்
கொடுங்கோல் அரசனுக்குச் 
செய்யும் சேவை
கெட்ட புத்தியுள்ளவர்களுடன் நட்பு - 
இவை போதும், ஒரு மனிதனை எரிக்க. 
வேறு நெருப்புத் தேவையில்லை.
5.வயதான காலத்தில் மனைவியின் 
மரணம்சகோதரர் கையில் பண 
அதிகாரம்தினசரி உணவுக்காக 
மற்றவரை அண்டி நிற்பது — 
இவை வாழ்க்கையின் முரண்பாடுகள். 
(anamoly). 
இவையே துக்கத்திற்கு காரணங்கள்.
8.நல்ல படிப்பு வேண்டும் என்று 
நினைக்கிற மாணவன் 
தவிர்க்க வேண்டிய விஷயங்கள் — 
காமம், குரோதம், லோபம்
அழகு படுத்திக்கொள்வது
வேண்டாத பொழுதுபோக்குக்காக 
நேரம் செலுத்துவது
அதிகமான தூக்கம்,  
எல்லா விஷயங்களிலும் 
எல்லை மீறி நடப்பது.
9.இந்த உலகம் ஒரு அழகான மரம். 
எப்பொழுதும் இரண்டு 
ருசிமிக்க பழங்களைக் 
கொடுக்கும் — 
அழகான,மிருதுவான பேச்சு
நல்லவருடைய சேர்க்கை.
10.பாம்பிற்குப் பல்லில் விஷம். 
விஷப் பூச்சிக்கு அதன் 
தலையில் விஷம். 
தேளுக்கு அதன் வாலில் விஷம். 
கெட்ட குணம் படைத்த 
மனிதனுக்கு 
உடல் பூரா விஷம்.
11.கடந்த காலத்தை நினைத்து 
வருந்தக் கூடாது. 
எதிர்காலத்தை நினைத்துக் 
கவலைப்படக் கூடாது. 
புத்திசாலிகள் நிகழ்காலத்தை 
மட்டும் நினைத்துத் 
தங்கள் வாழ்க்கையை 
அமைத்துக்கொள்வார்கள்.
12.எக்காரணத்தைக் கொண்டும் 
கீழே சொல்லப்பட்டவற்றை 
உங்கள் காலால் தொடதீர்கள் — 
நெருப்பு, ஆசிரியர், பிராமணர்
பசுகன்னிப் பெண்
வயதானவர்கள்,குழந்தைகள்.

13.ஒரு தனிமனிதனைக் 
குடும்ப நலத்திற்காகவும்
ஒரு குடும்பத்தைக் கிராம 
நலத்திற்காகவும்
ஒரு கிராமத்தை தேச 
நலத்திற்காகவும்
மனச்சாட்சிக்காக 
உலகத்தையும் 
தியாகம் செய்யலாம்.

14.எதிலும் அளவோடு 
செயல்பட வேண்டும். 
எல்லாமே ஒரு அளவோடு 
இருக்க வேண்டும். 
'சீதையின் மிக அதிகமான அழகு 
அவள் கடத்தப்படுவதற்குக் 
காரணமாக இருந்தது. 
ராவணனின் அளவுகடந்த திமிர் 
அவன் மரணத்திற்குக் காரணமாக 
அமைந்தது. 
மகாபலியின் அளவுக்கதிகமான 
தானம் செய்யும் புத்தி 
அவன் ஏமாறுவதற்கு 
வழிசெய்துகொடுத்தது.
15.மனிதன் தனியாகவே 
இந்த உலகத்திற்கு 
வருகிறான். 
தனியாகவே உலகத்தை 
விட்டுச் செல்கிறான். 
தனியாகவே தான் செய்த 
நல்லது- கெட்டது காரியங்களின்
பயனை அனுபவிக்கிறான். 
தனியாகவே தனக்கு உண்டான 
முடிவான நிலையை அடைகிறான்.





















2 comments:

Balam said...

Very interesting.I enjoyed it Thank you!
Balam

Unknown said...

Very nice