Sunday, February 05, 2012

நேரத்தின் மதிப்பு (Value of Time)


நாம் பார்க்கும், ரசிக்கும், அனுபவிக்கும் எல்லா 
பொருள்களையும்விட அதிக மதிப்புள்ள பொருள் - 
நேரம்.

நேரமே இல்லை”, “மூச்சு விடக்கூட நேரமில்லை”, 
முழி பிதுங்குகிறது”, “24 மணி நேரம் போதல” - 
என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். 
ஏன், நாமே, பல சமயங்களில் புலம்பியிருக்கிறோம். 
அதற்குத் தலையாய காரணம், நம்மில் பல பேருக்கு - 
Time Management —- நேரத்தை எப்படி திட்டமிட்டுச் 
செலவழிப்பது என்ற கலை தெரியாததுதான்.

ஒரு பொருளை மதித்து அதற்காக ஏங்குவதுபோல்
ஏன் நேரத்தையும் ஒரு பொருளாகக் கருதி 
அதை மதிப்பதில்லை?

ஒருவேளை, அதற்கு நாம் ஒரு விலை நிர்ணயம் 
பண்ணாத காரணமா
அதற்கு ஒரு விலை வைப்போமே...

Monday, January 30, 2012

உண்மை ஒன்றுதான், வழிகள் பலவிதம்!

எல்லா மதங்களின் சாராம்சமும் ஒன்றுதான். 
இதோ ஒரு உதாரணம்.

மற்றவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் 
என்பதைப் பற்றி எல்லா மதங்களும் 
ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகின்றன.

The Golden Rule என்று சொல்லப்படும். 
பின்பற்றத்தக்க மிகச் சிறந்த நன்னெறி சொல்கிறது
Treat others as you want to be treated. 
உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் 
என்று ஆசைப்படுகிறாயோ அதே மாதிரி 
நீயும் மற்றவர்களை நடத்து.

இது ஒரு உயர்ந்த moral code of ethics. 
பலதரப்பட்ட கலாச்சாரங்களின் மீது இந்த விதி 
செல்வாக்கு செலுத்திவந்திருக்கிறது. 
இதற்கு ethics of reciprocity 
என்றும் பெயர் உண்டு. 
நமக்கும் நம்மைச் சார்ந்த நபர்களுக்கும் 
இருக்கும் உறவு இருவழிப் பாதை போன்றது. 
ஒருதலைப்பட்ட தொடர்பு அல்ல. 
ஒரு சமமான தொடர்பு. 
இந்தத் தொடர்பைப் பற்றி 
வெவ்வேறு துறையினர் 
விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மதங்களோ இந்த நன்னெறி முறையை 
வேறுபாடில்லாமல் ஒத்துக்கொண்டிருக்கின்றன.

Monday, January 23, 2012

சங்க இலக்கியம் - புறநானூறு - ஒரு சிறிய அறிமுகம்


சங்க இலக்கியம் எனப்படுவது கி.மு.300-கி.பி.700 காலப் பகுதியில் 
எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். 
473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டது. 
பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டவர்களும்
பெண்களும், மன்னர்களும் இவற்றை எழுதியுள்ளனர்.

தமிழ் நூல்கள் பெரும் பிரிவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள் ஆகும்.

ஐந்தோ அல்ல அதற்குக் குறைந்தோ அடிகளைக் கொண்டு 
அமையப்பெற்றவை கீழ்கணக்கு நூல்கள். 
அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட நூல்கள்
மேல்கணக்கு நூல்கள்.

கீழ்க்கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும்
நீதிபோதனைகளையும் கூறுபவை. 
உதாரணங்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது
இனியவை நாற்பது, ஐந்திணை, ஆசாரகோவை, பழமொழி... 
மொத்தம் 18.

பதினெண் மேல்கணக்கு நூல்கள்: 
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.

தொகை என்றால் பல்வேறு காலகட்டங்களில் 
பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களைத் 
தொகுத்து  ஒரு நூலாக்குவது.

இப்படிமேற்சொன்ன நூல் முறையில் 
பதினெண் மேல்கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட 
தொகை நூல்கள் எட்டு.

இந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.

Sunday, January 15, 2012

கணவர்களே! இப்போது நீங்கள் மார்க் போடலாம்... உங்கள் மனைவிகளுக்கு


பரீட்சை மாடல் முந்தினது மாதிரிதான். 
30 வாக்கியங்கள் ­ 15 குறைகள்; 15 நிறைகள்; ­ 
மதிப்பெண் கண்டுபிடிக்கும் முறை முந்தைய மாதிரி. ­ 
Interpretation ­ கணவர் என்ற இடத்தில் 
மனைவி என்று வாசிக்கவும்.

அதே ‘Honour Code’ஐ பின்பற்றி 
உங்கள் அருமை மனைவியை எடைபோடுங்கள். 
மதிப்பெண்கள் குறைவாகக் கிடைத்தால்
சோர்ந்துவிடாதீர்கள். இருக்கவே இருக்கு... பாடல்

மனைவி அமைவதெல்லாம்...  இறைவன் கொடுத்த வரம்” 
என்று திருப்திப்பட்டுக்கொள்ளுங்கள்.

மனைவியும் இதைப் படிக்க சந்தர்ப்பம் இருப்பதால் 
ஒருவேளைஅவர்கள் உங்கள் லட்சிய மனைவி 
ஆவதற்கு முயற்சிகள் எடுக்கலாம் அல்லவா?

Sunday, January 08, 2012

மனைவிமார்களே! மார்க் போடலாம்,வாருங்கள்.... உங்கள் கணவன்மார்களுக்கு.

ஒவ்வொரு பெண்ணும், தன் திருமணத்திற்கு முன்
தனக்கு வரப்போகும் கணவனைப் பற்றி 
தன் மனதுக்குள் ஒரு உருவகத்தை 
நினைத்து வைத்திருப்பாள். 
அதில் எத்தனைப் பேருக்கு அந்தக் கனவுக் 
கணவன் நிஜ வாழ்க்கையில் அமைவான் 
என்பதற்கு ஒரு புள்ளிவிவரமும் கிடையாது. 
பெரும்பான்மையான (ஏன் எல்லா பெண்களுமே 
என்றுகூடச் சொல்லலாம்) பெண்கள் திருமணத்திற்கு 
பிறகு தனக்கு அமைந்த கணவர்கள் 
விதிப்படி அமைந்ததுஎன்ற  
வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

கனவு வேறு, நிஜம் வேறு என்பதில் 
ஒரு திடச் சித்தம் உள்ளவர்கள் 
தங்களை மாற்றிக்கொள்வார்கள். 
ஆனால் நிச்சயமாக, அவர்கள் உள்மனதில் 
நம் கணவரும் மற்ற கணவர்மார்கள்போல 
இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் 
இருக்கத்தான் செய்யும்.

அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவர் ஆத்துக்காரர் கொஞ்சறத கேட்டேளா?” 
என்ற பாடல் கேட்கும்போது ஒரு சிறு 
உறுத்தல் தோன்றலாம்.

உங்கள் மனதில் உள்ள உங்கள் கணவரைப் 
பற்றி இருக்கிற எண்ணங்களை வெளியே 
கொண்டுவர, இதோ ஒரு சந்தர்ப்பம். 

Sunday, January 01, 2012

வருக..வருக. 2012ஆம் ஆண்டே!—நீ அழிவைக் கொண்டு வந்தாலும், அச்சமில்லை, அச்சமில்லை...

2012ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.

வழக்கமாக, ஜோஸியர்கள், புது வருஷ பலன் 
சொல்லும்போதுமழை, வெள்ளம், பூகம்பம்
விவசாய வளர்ச்சிமக்களின் ஷேம லாபங்கள் — 
இவற்றைப் பற்றிதான் ஆருடம் சொல்வார்கள்.

ஆனால், 2012ஆம் ஆண்டு சமாச்சாரமே வேறு. 
கடந்த நான்கு வருஷங்களாக படித்தவர்கள்
விஞ்ஞானிகள் என்று வித்தியாசம் இல்லாமல் 
எல்லோரும் இந்த உலகம் டிசம்பர் 21, 2012இல் 
முடிவுக்கு வந்துவிடும் என்று எழுதிபேசி
பயமுறுத்தி வந்திருக்கிறார்கள். 
இதற்கு முக்கிய ஆதாரம்
மாயன்காலண்டர் 2012இல் முடிவடைகிறது. 
இதற்கு முன்னால் பல தடவை 
உலக அழிவைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் 
எழுதியிருக்கிறார்கள். 
உலகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 
இந்த ஆருடமும் அதே மாதிரிதான் 
என்று நம்பிச் செயல்படுவோம்.

கவிஞர் கண்ணாதாசன் எழுதியபடி

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே ....... 
தலைவன் இருக்கிறான் மயங்காதே

இதை நினைவுகூர்ந்து தெய்வத்தின் மேல் 
பாரத்தைப் போட்டுவிட்டு 
நம் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.

என் அருமை நண்பர்களுக்கும் 
அவர்கள் குடும்பத்தாருக்கும் 
என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்
எல்லோரும் சுகமாக இருக்கட்டும்
எல்லோரும் நோய் இல்லாமல் இருக்கட்டும்

Sunday, December 25, 2011

ஒரு “ரீமிக்ஸ்” பைபிள் கதை

மூன்று வாரங்களாக ஒரு ஹெவிசப்ஜக்டைப் 
பற்றி எழுதிவந்தேன். 
இது விழாக் காலம். 
கொஞ்சம் ‘Light’ ஆக வாய்விட்டுச் சிரிக்க 
வைப்போமே என்ற உயர்ந்த சிந்தனையில் 
எழுதப்படுகிற கட்டுரை இது.

விட்டலாச்சார்யா, மன்மோகன் தேசாய் 
படங்களைப் பார்க்கச் சென்றபோது 
உள்ள மனநிலையைப் போல் 
இந்தக் கட்டுரையையும் படியுங்கள்.

இது வித்தியாசமான ரீமிக்ஸ்’ 
(தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் வார்த்தை) 
செய்யப்பட்ட பைபிள் கதை.

நோவா (Noah) என்பவரைப் பற்றியும் 
அவர் கடவுள் ஆணைப்படி ஒரு ‘ARK’ — படகை 
தயார்செய்து அதில் ஒவ்வொரு உயிருள்ள 
ஜந்துவையும் ஆண் / பெண் என்று 
இரண்டு இரண்டாகச் சேர்த்துவைத்துப் 
பிரளய காலத்தில் அந்த ஜீவ ராசிகளையும் 
சில நல்ல மனிதர்களையும் காப்பாற்றினார் 
என்ற கதை பெரும்பான்மையோருக்குத் 
தெரிந்திருக்கும்

இப்பொழுது நான் சொல்லப்போகும் 
கதையும் அதே நோவாவின் படகு’ 
கதைதான். 
ஆனால் இது சற்று வித்தியாசமான 
கற்பனைக் கதை.

Monday, December 19, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள் – பகுதி3 (இறுதி)

என்னுடைய பதினாறாவது ஆசிரியர் மீன்


தூண்டிலில் வைக்கப்பட்டிருக்கும் 
உணவின் சுவையை நாடிச் சென்று
மீன் அந்தத் தூண்டிலில் சிக்கி இறக்கும்.

புத்தியில்லாத மனிதன், மீனைப் போல்
தன்னுடைய நாக்கைக் கட்டுப்படுத்தாமல்
கண்டகண்ட உணவுப் பொருள்களைச் 
சாப்பிட்டுத் தன் அழிவைத் தேடிக் கொள்கிறான். 
மற்ற இந்திரியங்களை வென்ற மனிதன் நாக்கை 
ஜெயிக்காத வரையில் யோகியாக மாட்டான். 
சுவையை வென்றால் எல்லாவற்றையும் 
வெல்லலாம்.
நாக்கையும் சுவையையும் கட்டுப்படுத்த வேண்டும் 
என்ற பாடத்தை மீனிடமிருந்து 
நான் கற்றுக் கொண்டேன்.

Sunday, December 11, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள – பகுதி 2

விளக்கம்1:
ஸ்ரீ தத்தாத்ரேயர் தன்னுடைய 24 குருக்களைப் பற்றி 
கூறியிருக்கிறாரே? அதுவும் இதுவும் ஒன்று தானா 
என்று சில பேர்கள் கேட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர்,உத்தவருக்கு சொன்ன கதையில்,
அவதூதர் என்று மட்டும் தான் சொல்லிருக்கிறார்.
அவதூதரின் பெயர் குறிப்பிடவில்லை.
ஆனால்,ஸ்ரீ தத்தாத்ரேயர் கதைகளில் மட்டும் தான், 
இங்த 24 குருமார்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும்,.பரசுராமருக்கு,இவர் உபதேசம் செய்திருக்கிறார்.
அதனால்,ஸ்ரீ தத்தாத்ரேயர் காலம்,பரசுராம 
அவதாரத்துக்கு முற்ப்பட்டதாக இருக்க வேண்டும் 
என்று தெரிகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரும்,யது ராஜாவை தன்னுடைய மூதாதயர்
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீ ரமண மஹரிஷியும் இந்த அவதூதர் ,ஸ்ரீ தத்தாத்ரேயர் தான் 
என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஒரு அவதார புருஷர்.
விளக்கம்:2
தன்னுடை 24 ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லும்  
இந்த கீதையின் சில பகுதிகள் இன்றைய சமூகத்துக்கும்
அறிவியலுக்கும்சூழ்நிலைகளுக்கும் பொருந்தாமல் 
இருப்பதைப் பார்க்க முடியும். 
இதைச் சிலர் எனக்கு மின்னஞ்சலில் 
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இங்கே தரப்பட்டிருப்பவை 
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டன என்பதைக் 
கவனத்தில்கொண்டு, நமக்குத் தேவையான அவற்றின் 
சாராம்சத்தை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை மனதில் கொண்டு மேற்கொண்டு வாசிக்கவும்.

Monday, December 05, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள – பகுதி 1



கீதை என்ற வார்த்தையைச் சொன்னவுடன் 
எல்லோருக்கும் ஞாபகம் வருவது 
பகவத் கீதைதான். 
விளக்கம் கேட்டால், தப்பாமல் இது 
கிருஷ்ணர் அர்சுனனுக்குச் சொன்ன 
உபதேசம் என்று சொல்வீர்கள்.

ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு, இன்னெரு 
கீதை இருக்கிறது  என்ற விஷயம் தெரியும்

அவர்களுக்காக இந்தச் சிறிய அறிமுகம்.

இந்த கீதைக்குப் பெயர் உத்தவ கீதை. 
ஹம்ஸ கீதை என்றும் சொல்வார்கள். 
இதை எழுதியவரும் வேத வியாஸர்தான். 
இதுவும் கிருஷ்ணரால்ஒரே நபருக்கு 
உபதேசம் செய்யப்பட்டது (one to one). 

பகவத் கீதை, மஹாபாரதத்தில் அர்சுனனுக்கும் 
கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்.

உத்தவ கீதை, பாகவத புராணத்தில், உத்தவருக்கும் 
கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்.

பாகவத புராணத்தில், 11ஆவது ஸ்காந்தத்தில் 
அத்யாயம் 6 : 11 இலிருந்து 29 அத்யாயம்வரை 
வருகிறது. கிட்டத்தட்ட 1000 பாடல்கள்.

இந்த உத்தவர் யார்?

Sunday, November 27, 2011

வைட்டமின் ‘ப’ – பற்றி விஷயம் தெரிந்த ‘நாலு பேர்’ என்ன சொல்கிறார்கள்?

‘Friend ராமசாமிஎன்பவர், 1950, 1960களில் 
ஒரு புகழ்பெற்ற நாடக, சினிமா நகைச்சுவை நடிகர். 
T.K.S. சகோதரர்கள் நாடகக் குழுவில் 
ஒரு முக்கியமான நடிகர். ஒல்லிக்குச்சியான
நெட்டையான உடல் வாகு உள்ளவர். 
மனிதன்என்ற நாடகத்தில் ஒரு காட்சி. 
ராமசாமி தன்னுடைய குடும்ப 
டாக்டரைப் பார்க்கச் செல்கிறார். 
அவர்களின் உரையாடல்:
டாக்டர், ராமசாமியை பரிசோதித்துவிட்டுச் 
சொல்வார்.
டாக்டர்: ராமசாமி, உங்களுக்கு ஒரு வியாதியும் 
இல்லை. வீக்காக இருக்கிறீர்கள். 
அதனால் நிறைய வைட்டமின்கள் 
சாப்பிட வேண்டும். இதோ  அதற்கான 
பிரஸ்கிரிப்ஷன்.
ராமசாமி: (அந்தச் சீட்டைப் பார்த்துவிட்டு) 
டாக்டர், ஒரு முக்கியமான வைட்டமின் 
மாத்திரையை எழுத மறந்துவிட்டீரே?
டாக்டர்: அது என்ன?
ராமசாமி:அது தான் வைட்டமின் ’.
டாக்டர்: இது என்ன புதுமையான வைட்டமின். 
நான் கேள்விப்பட்டதே இல்லையே?
ராமசாமி: ஐயா, வைட்டமின் என்பது பணம். 
அதுதான் எனக்குப் பற்றாக்குறை.
இந்த தமாஷான வார்த்தை நாளடைவில் 
மாணவர்களிடையே பிரபலமானது.  
இந்தக் கட்டுரை, வைட்டமின் வைப் பற்றியது. 
ஆனால், நிச்சயமாக, கண்டிப்பாக 
இந்தக் கட்டுரை மூலம், 10 நாளில் 
யாரும் பணக்காரர் ஆகிவிட முடியாது.

Sunday, November 20, 2011

ஒரு குழந்தையின் 10 கட்டளைகள் — பெற்றோருக்காக

“Ten Commandments” — என்று சொன்னவுடன், கடவுளால் 
மோசஸ் மூலம் யூதர்களுக்குச்   சொல்லப்பட்ட 10 கட்டளைகள், 
என்று எத்தனை பேர் நினைப்பார்கள், என்பது ஒரு யூகம்தான்.
ஆனால், அநேகமாக, எவரும் 1956இல், Cecil B. Demilleயால் 
தயாரித்து வெளியிடப்பட்ட திரைப்படத்தை 
மறந்திருக்க மாட்டார்கள். 
அதில் வரும் ஆண்டவன் இட்ட கட்டளைகள், 
ஞாபகம் இருக்கிறதோ என்னவோ
யூல் பிரைனர் மொட்டையும்
நீர் இரண்டாக பிளந்து  மறுபடியும் மூடிக்கொள்ளும் 
காட்சிகளும் நினைவில் இருக்கும். 
அது 30 வாரங்களுக்கு மேல் ஓடியனில் 
திரையிடப்பட்டது  என்பது ஒரு “extra news”.
இப்பொழுது 10 கட்டளைகளுக்கு வருவோம்.
இவை சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக 
இருந்துவந்திருக்கின்றன. ஆங்கில அகராதியிலும்
உபயோகத்திலும்  Ten Commandments என்றால் 
கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் என்று 
வழக்காக ஆகிவிட்டது.
இந்தக் கட்டுரையும் ஒரு வித்தியாசமான 
“Ten commandments” 10 கட்டளையைக் குறித்தது.
ஒரு குழந்தையின் ஆதங்கத்தில் எழுந்த கட்டளைகள் இவை.
பெற்றோர்களைச் சிந்திக்கவைக்கும் கட்டளைகள்.
என் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று 
எனக்குத் தெரியும். மற்றவர்களின் யோசனைகள் 
எனக்குத் தேவையில்லை”  என்ற மனோபாவத்தை மாற்ற 
முயற்சிக்கும் கட்டளைகள்.
சிந்தியுங்கள் மாற்றி யோசியுங்கள்.
முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

Sunday, November 13, 2011

ஒரு தாத்தா தன் அமெரிக்கப் பேராண்டிக்கு எழுதும் கடிதம்



அன்புள்ள பேராண்டிக்குத் தாத்தா எழுதுவது. 
நலம். நலமறிய அவா.

நானும் பாட்டியும் இந்தியாவில் செளக்கியமாக இருக்கிறோம்.

உன்னுடைய சமீபத்திய போட்டோவைப் பார்த்தோம். 
நீ கிடுகிடுவென்று வளர்ந்து விட்டிருக்கிறாய். மகிழ்ச்சி. 
நீ இப்பொழுது ஒரு டீன் ஏஜர்”, 
அதாவது, பாட்டி சொல்வதுபோல், ஒரு இரண்டுங்கெட்டான்.” 
உன் வயதுப் பையன்கள் போல் உனக்கும் பிடிவாதம், எரிச்சல், கோபம் 
இத்யாதி, நிறைய இருப்பதாக உன் அப்பாவும் அம்மாவும் 
வருத்தப்படுகிறார்கள். எப்படி உனக்குப் புத்திமதி சொல்வது என்று 
அவர்களுக்குத் தெரியவில்லையாம். என் மேலே 
அந்தச் சுமையை இறக்கி வைத்திருக்கிறார்கள்.


நான் உனக்கு அட்வைஸ்பண்ணப்போகிறதில்லை. 
இந்த உலக யதார்த்தத்தைச் சில வார்த்தைகளில்
உனக்குச் சுட்டிக்காட்டப்போகிறேன்.

நான் இங்கு சொல்லப்போகும் விஷயங்களை 
உன் பள்ளிக்கூட ஆசிரியர்கள் 
சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.

இது ஒரு வாழ்க்கைப் பாடம்.

Sunday, November 06, 2011

ஒரு வயதானவரின் பிரார்த்தனை, வேண்டுகோள்!




பிரார்த்தனை, கடவுளிடம்:

கடவுளே, எனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியும்.

வளவளவென்று பேசிக்கொண்டிருக்கிறேன். நான் வாயாடி’, 
உளறுவாயன்’ என்று பெயர் எடுப்பதைத் தடுத்து நிறுத்து.

எல்லா விஷயங்களிலும் கேட்டோ கேட்காமலேயே 
என் அபிப்பிராயத்தைச் சொல்லத் துடிக்கும் 
பழக்கத்தை விட்டுவிட உதவிசெய்.

Tuesday, November 01, 2011

தானம்




பிரும்மோபதேசக் கட்டுரை முடிவில் மனிதர்கள்
கடைப்பிடிக்க வேண்டிய தலையாயக் கடமை
தானம்தான் என்று சொல்லியிருந்தேன். 
அதன் விளக்கம் இதோ

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில்
தானம் என்றால் (பிறருக்கு நன்மை செய்யும்
நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது
தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் 
எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் 
என்று கூறுகிறது.

தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்குச் சொல்லிக்
கொடுக்கும் முதல் செய்யுள் – 
ஒளவையாரின் ஆத்திசூடி’. 
சுலபமானது. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியது.
அருமையான நீதி போதனைகள் அடங்கியது.
அறம் செய விரும்பு. (அறம் எனப்படும் நல்ல
உதவிகளைச் செய்ய விரும்பு)
இயல்வது கரவேல் (உன்னால் கொடுக்க 
இயன்றதை மற்றவர்களுக்குக்                           
கொடுக்கக் கற்றுக்கொள்)
ஈவது விலக்கேல் (தானம் செய்வதை நிறுத்தாதே)
ஐயம் இட்டு உண். (ஏழை எளியவர்களுக்கு 
தானம் செய்து உண் (சாப்பிடு)
தானமது விரும்பு (தன்னார்வமாக 
நன்கொடை கொடுப்பதை விரும்பு)

ஆக, குழந்தைகளுக்குச் சொல்லும் 
முதல் நீதிப் பாடமே 
தானத்தைப் பற்றித்தான். 
அப்படியிருந்தும் குழந்தைகள்
பெரியவர்களாக வளரும்போது 
ஏன் இதை மறந்துவிடுகிறார்கள்! 
சிந்தியுங்கள். விடை கிடைத்தால்
சொல்லுங்கள்.

Monday, October 24, 2011

தீபாவளி




என் அருமை  நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்  
தீபாவளி வாழ்த்துக்கள் .
Om sarvesham swastir bhavantu-
sarvesham shantir bhavatu-
sarvesham poornam bhavatu-
sarvesham mangalam bhavatu-
sarve bhavantu sukhinah-
sarve santu niramayaah-
sarve bhadrani pashyantu-
maakaschit duhkha bhaag bhavet. 
Om Shanthi  Shanthi   Shanthi 
ஓம். எல்லோருக்கும்  நல்லது நடக்கட்டும். 
எல்லோருக்கும்  அமைதி கிடைக்கட்டும்.
எல்லோருக்கும் பூர்ணத்துவம் கிடைக்கட்டும்.  
எல்லோருக்கும்  மங்களம் உண்டாகட்டும்.  
எல்லோரும் சுகமாக இருக்கட்டும். 
எல்லோரும்  நோய் இல்லாமல் இருக்கட்டும். 
எல்லோரும் நல்லதையே பார்க்கட்டும். 
ஒருவரும் துக்கத்தினால் பாதிக்கப்படக் கூடாது. 

ஓம் சாந்தி   ஓம் சாந்தி    ஓம் சாந்தி.

ஒவ்வொரு மதத்திற்கும் தனிப்பட்ட விரதங்கள்
உபவாசங்கள்  மற்றும் விழாக்கள் உண்டு. 

Sunday, October 16, 2011

கவி காளமேகம்



தமிழில் ப்ளாக்எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழைப் பற்றியோ, தமிழ்ப் புலவர்களைப் பற்றியோ எதுவுமே எழுதவில்லையேஎன்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டிருந்தது. அதன் விளைவு இந்தக் கிளறல்

[ஆங்கிலத்தில் சொல்வார்களேdisclaimer (முன்கூட்டியே மறுத்துவிடுவது) என்று. என்னுடைய disclaimerஉம் இதுதான்.]

நான் தமிழ் இலக்கியம், இலக்கணம் படித்ததில்லை. அது என் தப்பு இல்லை. 5ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், சமஸ்கிருதமும்தான் ஆனால் தமிழ் (மீடியம்) படித்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு சிரோமணி தேர்வுக்காக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படித்தேன், பாஸ் செய்தேன். (கோனார் நோட்ஸ் தயவில்) அதனால் என்னை பெரிய இலக்கியவாதி என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

சின்ன வயதில் எனக்கு அறிமுகமான முதல் தமிழ்ப் பாட்டு இதோ

Sunday, October 09, 2011

நான் நிரந்தரமாக வாழ ஆசைப்படுகிறேன் -உங்கள் உதவியுடன்

விளம்பரத்துக்கு ஆசைப்பட்டுக் கோவில் படிகளிலும், கோவில் விளக்குகளிலும் தாங்கள் அளித்த நன்கொடையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தக் காலத்தில், நிறைய பெரிய மனிதர்கள், எந்த ஒரு விளம்பரத்தையும் எதிர்பாராமல் தங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் தத்துவ ஞானி – ரேமாஜி (1913 – 1990) .
இவர் விட்டுச் சென்ற தத்துவ பாதை ‘மாஸ்க்விஸம்’ .(www.masquism.com).
இவர் யார் என்று பல பேருக்குத் தெரியாது என்பதில் ஒரு ஆச்சரியம் இல்லை. ஏனெனில் இவர் ஒரு விளம்பரப் பிரியர் அல்ல.
இவருடைய பூர்வாசிரமப் பெயர் – R. வைத்தியநாதன். இதுவும் ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது.

Monday, October 03, 2011

பிரும்மோபதேசம்




இது பிராமணச் சிறுவர்களுக்கு உபநயனம் செய்துவைக்கும் போது நடத்தப்படும் முக்கியமான சடங்கைப் பற்றியது அல்ல. பிரும்மாவின் உபதேசம் (அறிவுரை) பற்றிய ஒரு புராணக் கதை.
இந்த கதை ப்ருகத் ஆரண்யக உபநிஷத்தில் (Ch.V: Section 2) இல் இருக்கிறது.
பிரஜாபதி (பிரும்மா) ஒரு நல்ல ஆசிரியர். அவரிடம் தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். படிப்பு முடிந்து மாணவர்கள் விடைபெறும் காலம்.

Monday, September 26, 2011

கிசுகிசு


மற்றவர்களைப் பற்றி உண்மை என்று உறுதியாகத் தெரியாதச் செய்திகளைப் பற்றி எழுதுதல், பேசுதல். Gossip (காஸிப்), வதந்தி, புரளி என்றும் சொல்வார்கள்.
ஆனால் எல்லோருக்கும் தெரிந்த, சுவையான பெயர் கிசுகிசுதான்.
இது ஆட்சி செய்யாத இடமே கிடையாது.
கிசுகிசு நல்லதா? கெட்டதா?
இதோ கிசுகிசு தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு ஆங்கிலக் கவிதை: