Wednesday, December 05, 2012

சிரிக்கிறவன் நீண்ட நாள் வாழ்கிறான் (He who laughts- lasts)


64 வாரங்களாகத் தொடர்ந்து 
serious விஷயங்களைப் பற்றி 
எழுதிவந்த நான்
ஒரு மாறுதலுக்காக
ஒரு light ஆன விஷயத்தைப் 
பற்றி எழுதலாம் 
என்று நினைக்கிறேன்.
சிரிப்பைவிட (laughter) 
ஒரு 'light' ஆன விஷயம் 
இருக்க முடியாது.
அதனால், இந்த வாரம்
ஒரு 'நகைச்சுவை' வாரம்.
இங்கே சொல்லப்பட்டிருக்கிற 
நகைச்சுவை விஷயங்களோ
கொடுக்கப்பட்டிருக்கிற 
வீடியோக்களோ புதிதாக இருக்காது. 
தெரிந்ததை மறுபடியும் படிப்பது 
கொஞ்சம் "போரான" சமாச்சாரம்தான். 
ஆனால், நகைச்சுவை மாறுபட்ட விஷயம். 
வாழைப்பழத் தோலை மிதித்து 
வழுக்கி விழுந்த காட்சியை 
எத்தனை தரம் பார்த்தாலும், நினைவுபடுத்திக்கொண்டாலும் 
சிரிப்பு இன்னும் வருகிறதல்லவா?
அதனால், இந்தப் பகுதியைப் படிக்கும் 
வாசகர்களிடம் ஒரு சிறு புன்னகையாவது 
தோன்றும் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன்.

டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சமூக நல விஞ்ஞானிகள் என்று மனித உடல்நலத்தில்அக்கறைகொண்ட 
அத்தனை படித்தவர்களும் 
ஒரு மனதாக ஒத்துக்கொண்ட விஷயம்
"மருந்துகளில் சிறந்த மருந்து, சிரிப்பு" - 
Laughter is the best medicine.
அநேக ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 
அவர்கள் சொன்னதன் கருத்து:
சிரிப்பு அவசியம்.

Monday, November 26, 2012

சாணக்கிய நீதி



சாணக்கியர்’-
என்று சொன்னவுடன்
நம்மில் பலர் மனதில் 
தோன்றுவது
அவருடைய அவிழ்ந்த குடுமியும் 
அவர் எடுத்த சபதமும்தான்.
பாஞ்சாலிசபதத்திற்குப் பிறகு 
வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் - 
சாணக்கிய சபதம்தான்.
கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து
தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது - 
பாஞ்சாலி சபதம். 
நந்தர்களின் ஆட்சியை அழித்து
சந்திரகுப்தரை மன்னராக்கி
குப்தர் பொற்காலத்திற்கு 
அடிகோலியது - 
சாணக்கிய சபதம்’.
சாணக்கியருடைய சபதம் போல்
அவர் எழுதிய அர்த்த சாஸ்திரமும் 
உலகப் பிரசித்தி பெற்றவை.
அர்த்த சாஸ்திரம், ஒரு statecraft 
புத்தகம். 
அதாவது அராசங்கமும் அரசனும் 
எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும் 
என்பதை விளக்கும் நூல்.
இது சரித்திரம் படித்த 
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பல பேருக்குத் தெரிந்திருக்க 
வாய்ப்பில்லாத விஷயம் — 
இதே சாணக்கியர், மனிதனுடைய 
வாழ்வு வளம்பெற, ஒரு நீதி சாஸ்திர 
நூலையும் இயற்றியிருக்கிறார். 
அதுதான் சாணக்கிய நீதி’ என்ற நூல்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் 
வெவ்வேறு சமயங்களிலும் 
பெரிய மஹான்கள்,
மானிடர்கள் நலம்பட
நல்ல கருத்துக்களை
போதித்திருக்கிறார்கள்.
தமிழில் திருக்குறள்
ஒளவையாரின் நல்வழி
மூதுரை ஆகிய நூல்கள்
உலக நீதி போன்றவை 
பிரசித்தம். 
வடமொழி இலக்கியத்தில்,  
சுக்ரநீதி, மனுநீதிவிதுரநீதி 
என்று பல நூல்கள் உள்ளன. 
அவற்றில் சாணக்கிய நீதியும் 
ஒரு சிறந்த நூலாகப் புகழப்படுகிறது. 
இதில், இன்னொரு விஷயம்
மற்ற நீதிகளின் ஆசிரியர்கள் 
புராண, இதிகாச மனிதர்கள். 
ஆனால் சாணக்கியர்
ஒரு சரித்திர கால புருஷர். 
2500 ஆண்டுகளுக்கு 
முன் வாழ்ந்தவர். 
அவரைப் பற்றிய கதைகள்
சரித்திர நிரூபணம் 
இல்லாத கதைகளாக இருந்தாலும்
அவர் வாழ்ந்த காலம்
அவர் ஈட்டிய பணிகள்
அவர் எழுதிய காவிய நூல்கள் 
சரித்திர ஆசிரியர்கள் 
ஏற்றுக்கொண்டவை.
சாணக்கிய நீதியில் என்ன 
நல்ல விஷயங்கள் 
சொல்லப்பட்டிருக்கின்றன
என்பதைப் பார்க்கும் முன் 
அதன் ஆசிரியர், சாணக்கியரைப் 
பற்றிக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்
கொள்வோம்.

Tuesday, November 20, 2012

முதியோர்களை வெறுத்து ஒதுக்குவது சரியா?


தவறு-என்கிறது, 
எல்லா நாடுகளிலும் சொல்லப்படும்
கர்ண பரம்பறை கதைகள்.

அதற்கான ஒரு திருஷ்டாந்த கதை……..

ஒரு ஊரில்,ஒரு ராஜா இருந்தார்.
அவருக்கு நல்ல ஆலோசனை சொல்ல,
எப்போதும், அவருடன் நிறைய
முதிய அறிவாளிகள் இருந்தனர்.
ராஜ்யம் செழிப்பாக இருந்தது. 
மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். 
அந்த ராஜாவுக்கு ஒரு மகன்.
அவனுக்கு அவன் அப்பாவுடன் 
இருக்கும் முதியோர்களை 
கண்டாலே பிடிக்கவில்லை.
"இந்த கிழங்கள் எல்லாம் 
பழைய கொள்கைகளை 
கடைப்பிடித்து நாட்டை 
கெடுக்கின்றனர்.
நான் பதவிக்கு வந்தவுடன் 
இவர்களுக்கு ஒரு வழி பண்ணுகிறேன் "
என்று கருவிக் கொண்டிருந்தான்.

ராஜா காலமானார்.
பையன் ராஜாவானான்.
முதல் வேலையாக,
எல்லா முதியோர்களும்
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் 
என்று உத்தரவு போட்டான்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
"முதுமை கெட்டது-இளமை நல்லது" 
என்ற மன நிலையில் இருந்த 
ராஜா தன் முடிவை மாற்றிக் 
கொள்ளவில்லை. 
எல்லா முதியோர்களும் நாட்டை 
விட்டு  வெளியேறினார்கள்.
ராஜா தன்னைச் சுற்றி ஒரு இளைஞர் 
கூட்டத்தை சேர்த்துக் கொண்டான்.

எங்கும்,அழுகை குரல்-
ஒரு வீட்டைத் தவிர..

Monday, November 12, 2012

என்னை நினைவு இருக்கிறதா? நான் தான் உங்கள் தாயின் மணிக்கொடி

பாரத தாயின் அருமை குழந்தைகளே!
நான் தான், உங்கள் தேசிய கொடி.
முதலில், என் தீபாவளி வாழ்த்துக்கள்.
நோய் நொடி இல்லாமல் வாழ, என் ஆசிகள்.

ரொம்ப நாளாகவே என்னுள் ஒரு உறுத்தல்.
உங்களிடம் பேசித்தான் ஆக வேண்டும்-
இது உங்களையும் என்னையும் பற்றியது.
"அதற்கு இது தான் நேரமா? 
நல்ல நாளும் அதுவா?"
என்று கேட்பது,புரிகிறது.
அதற்கு காரணம்,
நான் எப்படி தேசம் பூராவுக்கும் 
சொந்தமோ,அதே மாதிரி,
தீபாவளி ஒன்று தான்,ஒரு தேசிய 
பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அதனால் தான், இந்த 
சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு நல்ல நினைவு இருக்கிறது..
1947,ஆகஸ்ட் 15,சுதந்திர தினம்.
எப்படி எல்லாம் எனக்கு மரியாதை செய்து
"தாயின் மணிக் கொடி பாரீர் "
என்று கோஷம் போட்டு,என் முன் 
"ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"
என்று ஆடி பாடி, நீங்கள் மகிழ்ந்தீர்கள்,
என்பது -ஒரு பசுமையான நினைவு.
அதே மாதிரி,
நம்முடைய முதல் குடியரசு தினம்-
ஜனவரி,26,1950.மறக்க முடியுமா?

என்னைப் பற்றிய, அந்த உற்சாகம் ,
உங்களில் எத்தனை பேருக்கு 
இன்னும் இருக்கு?-

சங்கடமான கேள்வி
விடை சுலபம்.
இல்லவே இல்லை.
Zero enthusiasm--
மன்னிக்கவும்..
வருடத்தில் 2 நாட்கள், நீங்கள் 
நிச்சயாமாக என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 
கட்டாயத்தில் இருக்கிறீர்க்ள்.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,
சம்பிராதய சடங்குகள்.
அவ்வளவு தானா,என் Roll?

Wednesday, November 07, 2012

எதிர்மறையாகவே இயங்கும் உலகத்தில் நம்பிக்கையுடன் (Positive) வாழ்வது எப்படி?



சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: 
"ஒரு நாளில்நீங்கள் எந்தப் 
பிரச்சினையையும் சந்திக்கவில்லை 
என்றால்நிச்சயமாக நீங்கள் 
ஏதோதப்பான வழியில் 
பிரயாணம் செய்துகொண்டிருக்கிறீர்கள்."
(In a day, when you don't come 
across any problem, 
you can be sure that 
you are travelling a wrong path)
சுவாமிஜி இதை ஒரு ஜோக்காகச் 
சொல்லியிருக்க மாட்டார். 
சொன்னது
அவர் வாழ்ந்த வாழ்க்கைச் 
சூழ்நிலையில்
அதாவது 100 ஆண்டுகளுக்கு 
முன்னால். 
"பிரச்சினை இல்லாத மனித வாழ்க்கை 
இருக்க முடியாது" என்று சொன்ன 
சுவாமிஜி
பிரச்சினையே வாழ்க்கையாக 
மாறிவிட்டிருக்கும் 
இந்தக் காலத்தைப் பற்றி 
எப்படி வர்ணித்திருப்பார்?
அலுத்து, வெறுத்துப்போன சூழ்நிலை-  
எங்கு திரும்பினாலும். 
ஒரு லிஸ்ட் போடலாம் என்றால்
எவ்வளவு நீளம் அது போகும்
எதைச் சேர்க்கணும்
விலைவாசி, பவர்கட்
பெட்ரோல் விலைசுகாதாரம்
கொலை, கொள்ளை
கற்பழிப்புஏமாற்றல்
ஒழுங்கின்மைலஞ்சம்
கோவில் சொத்து திருடுபோவது
scandals, scams  etc... etc...
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு 
விதத்தில் வெவ்வேறு பரிமாணத்தில் 
இந்தப் பிரச்சினைகள் தாக்குகின்றன.
"சர்வம், பிரம்ம மயம் ஜகத்" — 
இந்த உலகம் முழுவதும் 
"பிரம்மம்" என்பது வேத வாக்கு. 
இன்றைய புது மொழி: 
"சர்வம் டென்ஷன் மயம் ஜகத்". 
எல்லாமே டென்ஷன்’. 
டென்ஷன்’ வந்தால் stress. 
stress வந்தால் 
எல்லா வியாதிகளும் 
தேடி வரும். 
நிம்மதி போய்விடும்.
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” 
என்று பாடத் தோன்றும்.
இப்படி இருக்கிற 
எதிர்மறை உலகில் 
எப்படி நிம்மதி கிடைக்கும்
எப்படி பாஸிடிவாக வாழ முடியும்?
தர்மர், அரிச்சந்திரன் போன்ற 
புராணகால மனிதர்களால் 
இன்றைய சூழ்நிலையில் 
வாழ முடியுமா?
முடியும்- என்கிறார்கள், 
மகான்கள்படித்த பெரியோர்கள். 
சொல்லில் மாத்திரம் இல்லை
வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பெரியோர்கள் சொல்லும் 
வழி ரொம்ப சிம்பிள்.

Wednesday, October 31, 2012

‘அமெரிக்கா’ பிடிச்சிருக்கா?'




கடந்த 10 ஆண்டுகளாக, நானும் என் மனைவியும் எப்போதெல்லாம் அமெரிக்காவிலிருந்து 
இந்தியாவிற்குப் போகிறோமோ அல்லது இந்தியாவிலிருந்து வரும் யாரையாவது 
சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் எங்களிடம் கேட்கப்படுகிற கேள்விகள்: 
என்ன, அமெரிக்காவிலேயே செட்டில் 
ஆகிவிட்டீங்களே, எப்படி இருக்கிறீங்க
அமெரிக்கா பிடிச்சிருக்கா
சந்தோஷமாக இருக்கிறீங்களா?’

இவை ஒரு சம்பிரதாயத்திற்காகக் 
கேட்கப்படுகிற கேள்விகள் என்று நாங்கள் 
நினைத்தது கிடையாது. 
பலரிடம் எங்களைப் பற்றி 
ஒரு genuine concern  ஏற்பட்டதால் 
எழுந்த கேள்விகள்தான் என்று நினைக்கிறோம்,

60 ஆண்டுகளாக, ஒரு தனி அடையாளத்தோடு’ 
இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன 
2 கிழங்கள் எப்படி வயதான காலத்தில் 
ஒரு புதிய சூழ்நிலையில் தங்கள் கடைசிக் 
காலத்தைக் கழிக்கப்போகிறார்கள்’ 
என்ற கவலை அவர்களில் பலருக்குத் தோன்றியிருக்கலாம். 
அவர்களுக்கு மட்டுமில்லை. 
ஆரம்ப காலத்தில் எங்களுக்கும் 
இந்த முடிவை எடுக்கும் முன் 
கொஞ்சம்’ பயம் இருந்தது.

கொஞ்சம்தான்.

ஏனெனில், எங்கள் முடிவு அமெரிக்காவைப் 
பற்றியது அல்ல. 

Monday, October 22, 2012

கூடிய சீக்கிரம் "அழியும் ஆபத்துக்குள்ளாவது"(Endangered) எது?


அழியும் ஆபத்துக்குள்ளானது (Endangered) 
என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது
அநேகமாக விலங்கினங்களோ
பறவைகளோ அல்லது தாவர 
இனங்களோவாகத்தான் இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் மேலே 
சொல்லப்பட்ட எதுவும் இல்லை.
கொஞ்சம் நன்றாக மூச்சு வாங்கி விடுங்கள். 
பதட்டப்படாமல் மேலே படியுங்கள்.

இந்தியாவில் கூடிய சீக்கிரம் 
அழியும் ஆபத்துக்குள்ளாகப் போவது - 
இந்தியாவின் நதிகள். 
குறிப்பாகத் தாயாருக்குச் சமமாகப்
போற்றப்படும் - கங்கை நதிதான்.
ஆச்சரியமாக இருக்கிறதா

கங்கை நதி









Monday, October 15, 2012

நவராத்திரி, லலிதாம்பாள் சோபனம் - சில நினைவுகள்



இது நவராத்திரி வாரம்.
நவராத்திரியைப் பற்றி 
ஏதாவது கிளறுங்களேன்” - 
இது அன்பு மனைவியின் வேண்டுகோள்.
அதைக் கட்டளையாக மதித்து
இந்தப் பகுதி எழுதப்படுகிறது.
நவராத்திரியைப் பற்றி என் சிறு வயது 
அனுபவங்களைச் சொல்ல வேண்டுமென்றால் 
உங்களை 65 ஆண்டுகளுக்குப் பின்னால் 
கூட்டிச்செல்ல வேண்டும்.

flashback தானே? உண்மைதான். 
ஆனால் அது பழகிப்போன வார்த்தை. 
புதிதாக இப்போது பேசப்படும் வார்த்தை 
time travel - காலத்தின் வழியே பயணம். 
நாமும் time travel பண்ணப்போகிறோம். — 
பின்னோக்கி.
காலம் 1936 - 1947 (எனக்கு 5-16 வயது)
இறங்கிய இடம்: திருநெல்வேலி டவுன்
தெப்பக் குளத் தெரு. 147 வீடுகள் கொண்ட 
ஒரு அக்ரஹாரம். 
ஒட்டினாற்போல் வீடுகள். 
privacy என்ற வார்த்தைக்கு என்ன விலை?’ 
என்று கேட்கும் நல்ல மனிதர்கள்’. 
யார் வீட்டில் என்ன விசேஷம் 
என்றாலும் பசங்களுக்குப் பிரத்யேக 
அழைப்பு கிடையாது. 
free for all தான். 
என் வயதுப் பசங்கள்ஆவலுடன் 
எதிர்பார்க்கும் வருடாந்திரப் பண்டிகைகள் 
நான்கு. அவை: 
ராமநவமி,அரசப் பிரதக்ஷிணம்,
மார்கழி மாத பஜனை, நவராத்திரி.
அப்படி என்ன விசேஷம்?

Monday, October 08, 2012

பசி வந்திடப் பத்தும் பறந்துபோகுமாமே... அது என்ன பத்து?

விடை கிடைக்கக் கொஞ்சம் நேரம் ஆகும்.
பசியைப் பற்றி எழுதலாமே என்று நினைத்தவுடன் 
என்னுள் எழுந்த எண்ண அலைகள் 
மனம் ஒரு குரங்குதான்அதிலும் கள் குடித்துத் 
தேள் கொட்டிய குரங்குதான் 
என்பதை உறுதிப்படுத்திவிட்டன.

2 நிமிடத்தில் வந்த எண்ணங்கள்:

பசி - உணவு - சாப்பாட்டு ராமன் - 
சமஸ்கிருத வாத்தியார் - சமஸ்கிருதம் - உபநிஷத் - 
உணவு - A.K. Chettiar - பசி

அதனால் இந்தக் கட்டுரையையும் 
என் மனம்போன போக்கில் 
எழுத உத்தேசம்.

நான் Fourth Form ( 9ஆம் வகுப்பு) 
படித்துக்கொண்டிருந்தேன்.  
ஆங்கில வகுப்பு - Grammar Class - Wren&Martin 
என்ற வேத புத்தகம். பாடம்: Phrases and Sentences (சொற்றொடர்களும்வாக்கியங்களும்.).

வாத்தியாரின் கேள்வி: 
கீழ்க்கண்ட Pharaseகளை உபயோகித்து 
வாக்கியங்கள் அமைக்க: 
கொடுத்திருந்த ஒரு Phrase — 
"in order to"

தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 
ஒரு கெட்ட பழக்கம் - முதலில் தமிழில் யோசித்துவிட்டுப் 
பிறகு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது. 
நான் தமிழில் யோசித்த வாக்கியம்: 

நாம் வாழ உணவு சாப்பிடுகிறோம். — 
We eat in order to live
ஆனால் எழுதிய ஆங்கில வாக்கியம் — 
"We live in order to eat" (நாம் சாப்பிட வாழ்கிறோம்).

Sunday, September 30, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 2
                                                                             வயோதிகமும் வயோதிகர்களும்” 
என்ற  தலையாய பிரச்சினையை 
எப்படி இந்திய அரசும்  இந்திய மக்களும்
ஒரு அலட்சிய நோக்குடன் அணுகுகிறார்கள் 
என்பதைப் பகுதி 1இல் பார்த்தோம்.

வளர்ந்த  நாடுகளைப் போல்
இந்தப் பிரச்சினைக்கு ஒரு 
தெளிவான  நோக்குடன் 
விரிவான திட்டம் விரைவாக 
உருவாக்கப்பட வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால்
வருங்காலத்தில்  இது சமூக, 
பொருளாதாரப் பிரச்சினையாக 
உருவாவதற்கான வாய்ப்பு 
நிறையவே உள்ளது.

யார், ‘மணியைக் கட்டுவது?’

முதலில்இது ஒரு நாட்டுப் பிரச்சினை. 
அதனால் பொறுப்பு மத்திய
மாநில அரசுகளுக்குத்தான். 
முதல் பெற்றோரும் அவர்கள்தான் - 
வளர்ந்த நாடுகளில் 
‘GERONTOLOGY’  
அதாவது வயதானவர்களைப் 
பற்றிய பிரச்சினைகள்  
ஒரு துறையாகவே வளர்ந்து  
அதற்கு  மிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார்கள். 
இந்தியாவிலும் இது 
பரவ ஆரம்பித்திருக்கிறது,
ஒரு நல்ல அறிகுறி.

உடல்ரீதியாக முதுமை டைதல்,  
மனோரீதியாக முதுமை அடைதல், 
சமூகரீதியாக முதுமை அடைதல்  - 
என்று வயோதிகத்தின் பல பரிமாணங்களை 
ஆராய்ச்சிசெய்து ஒவ்வொன்றுக்கும் 
தேவையான திட்டங்களை 
வகுப்பதில் வளர்ந்த  நாடுகள் 
கவனம் செலுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இந்திய நாடு 
ரொம்பவே பின்தங்கியிருக்கிறது.