Monday, October 22, 2012

கூடிய சீக்கிரம் "அழியும் ஆபத்துக்குள்ளாவது"(Endangered) எது?


அழியும் ஆபத்துக்குள்ளானது (Endangered) 
என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது
அநேகமாக விலங்கினங்களோ
பறவைகளோ அல்லது தாவர 
இனங்களோவாகத்தான் இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் மேலே 
சொல்லப்பட்ட எதுவும் இல்லை.
கொஞ்சம் நன்றாக மூச்சு வாங்கி விடுங்கள். 
பதட்டப்படாமல் மேலே படியுங்கள்.

இந்தியாவில் கூடிய சீக்கிரம் 
அழியும் ஆபத்துக்குள்ளாகப் போவது - 
இந்தியாவின் நதிகள். 
குறிப்பாகத் தாயாருக்குச் சமமாகப்
போற்றப்படும் - கங்கை நதிதான்.
ஆச்சரியமாக இருக்கிறதா

கங்கை நதி









Monday, October 15, 2012

நவராத்திரி, லலிதாம்பாள் சோபனம் - சில நினைவுகள்



இது நவராத்திரி வாரம்.
நவராத்திரியைப் பற்றி 
ஏதாவது கிளறுங்களேன்” - 
இது அன்பு மனைவியின் வேண்டுகோள்.
அதைக் கட்டளையாக மதித்து
இந்தப் பகுதி எழுதப்படுகிறது.
நவராத்திரியைப் பற்றி என் சிறு வயது 
அனுபவங்களைச் சொல்ல வேண்டுமென்றால் 
உங்களை 65 ஆண்டுகளுக்குப் பின்னால் 
கூட்டிச்செல்ல வேண்டும்.

flashback தானே? உண்மைதான். 
ஆனால் அது பழகிப்போன வார்த்தை. 
புதிதாக இப்போது பேசப்படும் வார்த்தை 
time travel - காலத்தின் வழியே பயணம். 
நாமும் time travel பண்ணப்போகிறோம். — 
பின்னோக்கி.
காலம் 1936 - 1947 (எனக்கு 5-16 வயது)
இறங்கிய இடம்: திருநெல்வேலி டவுன்
தெப்பக் குளத் தெரு. 147 வீடுகள் கொண்ட 
ஒரு அக்ரஹாரம். 
ஒட்டினாற்போல் வீடுகள். 
privacy என்ற வார்த்தைக்கு என்ன விலை?’ 
என்று கேட்கும் நல்ல மனிதர்கள்’. 
யார் வீட்டில் என்ன விசேஷம் 
என்றாலும் பசங்களுக்குப் பிரத்யேக 
அழைப்பு கிடையாது. 
free for all தான். 
என் வயதுப் பசங்கள்ஆவலுடன் 
எதிர்பார்க்கும் வருடாந்திரப் பண்டிகைகள் 
நான்கு. அவை: 
ராமநவமி,அரசப் பிரதக்ஷிணம்,
மார்கழி மாத பஜனை, நவராத்திரி.
அப்படி என்ன விசேஷம்?

Monday, October 08, 2012

பசி வந்திடப் பத்தும் பறந்துபோகுமாமே... அது என்ன பத்து?

விடை கிடைக்கக் கொஞ்சம் நேரம் ஆகும்.
பசியைப் பற்றி எழுதலாமே என்று நினைத்தவுடன் 
என்னுள் எழுந்த எண்ண அலைகள் 
மனம் ஒரு குரங்குதான்அதிலும் கள் குடித்துத் 
தேள் கொட்டிய குரங்குதான் 
என்பதை உறுதிப்படுத்திவிட்டன.

2 நிமிடத்தில் வந்த எண்ணங்கள்:

பசி - உணவு - சாப்பாட்டு ராமன் - 
சமஸ்கிருத வாத்தியார் - சமஸ்கிருதம் - உபநிஷத் - 
உணவு - A.K. Chettiar - பசி

அதனால் இந்தக் கட்டுரையையும் 
என் மனம்போன போக்கில் 
எழுத உத்தேசம்.

நான் Fourth Form ( 9ஆம் வகுப்பு) 
படித்துக்கொண்டிருந்தேன்.  
ஆங்கில வகுப்பு - Grammar Class - Wren&Martin 
என்ற வேத புத்தகம். பாடம்: Phrases and Sentences (சொற்றொடர்களும்வாக்கியங்களும்.).

வாத்தியாரின் கேள்வி: 
கீழ்க்கண்ட Pharaseகளை உபயோகித்து 
வாக்கியங்கள் அமைக்க: 
கொடுத்திருந்த ஒரு Phrase — 
"in order to"

தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 
ஒரு கெட்ட பழக்கம் - முதலில் தமிழில் யோசித்துவிட்டுப் 
பிறகு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது. 
நான் தமிழில் யோசித்த வாக்கியம்: 

நாம் வாழ உணவு சாப்பிடுகிறோம். — 
We eat in order to live
ஆனால் எழுதிய ஆங்கில வாக்கியம் — 
"We live in order to eat" (நாம் சாப்பிட வாழ்கிறோம்).

Sunday, September 30, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 2
                                                                             வயோதிகமும் வயோதிகர்களும்” 
என்ற  தலையாய பிரச்சினையை 
எப்படி இந்திய அரசும்  இந்திய மக்களும்
ஒரு அலட்சிய நோக்குடன் அணுகுகிறார்கள் 
என்பதைப் பகுதி 1இல் பார்த்தோம்.

வளர்ந்த  நாடுகளைப் போல்
இந்தப் பிரச்சினைக்கு ஒரு 
தெளிவான  நோக்குடன் 
விரிவான திட்டம் விரைவாக 
உருவாக்கப்பட வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால்
வருங்காலத்தில்  இது சமூக, 
பொருளாதாரப் பிரச்சினையாக 
உருவாவதற்கான வாய்ப்பு 
நிறையவே உள்ளது.

யார், ‘மணியைக் கட்டுவது?’

முதலில்இது ஒரு நாட்டுப் பிரச்சினை. 
அதனால் பொறுப்பு மத்திய
மாநில அரசுகளுக்குத்தான். 
முதல் பெற்றோரும் அவர்கள்தான் - 
வளர்ந்த நாடுகளில் 
‘GERONTOLOGY’  
அதாவது வயதானவர்களைப் 
பற்றிய பிரச்சினைகள்  
ஒரு துறையாகவே வளர்ந்து  
அதற்கு  மிக முக்கியத்துவம் 
கொடுக்கிறார்கள். 
இந்தியாவிலும் இது 
பரவ ஆரம்பித்திருக்கிறது,
ஒரு நல்ல அறிகுறி.

உடல்ரீதியாக முதுமை டைதல்,  
மனோரீதியாக முதுமை அடைதல், 
சமூகரீதியாக முதுமை அடைதல்  - 
என்று வயோதிகத்தின் பல பரிமாணங்களை 
ஆராய்ச்சிசெய்து ஒவ்வொன்றுக்கும் 
தேவையான திட்டங்களை 
வகுப்பதில் வளர்ந்த  நாடுகள் 
கவனம் செலுத்துகின்றன.

இந்த விஷயத்தில் இந்திய நாடு 
ரொம்பவே பின்தங்கியிருக்கிறது.

Monday, September 24, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 1:

வயதிலும்அறிவிலும்அனுபவத்திலும் 
பழுத்த வயதினரை யார் தினசரி 
வணங்கிச் சேவை செய்கின்றார்களோ
அவர்கள் நீண்ட ஆயுள்ஞானம்புகழ்பலம் 
என்ற நான்கு விதமான சித்திகளை 
அடைவார்கள்.
சமஸ்கிருதப் பழமொழி. 
                                                                              "ஒரு குழந்தையின் கஷ்டம்
தாயாருக்குப் புரியும்:  
ஒரு யுவனின் கஷ்டம்
ஒரு யுவதிக்குப் புரியும்:  
ஒரு வயோதிகனின் கஷ்டம்
யாருக்குமே புரியாது.
விக்டர் ஹ்யூகோ

1982ஆம் ஆண்டு - ஜூலை:
ஆஸ்த்ரியா நாட்டில்,ஒரு உலக மகாநாடு. 
வயோதிகத்தையும் (aging),
வயோதிகர்களையும் (aged) பற்றி 
விவாதிக்கும் மேடை.
இந்திய அரசு  சார்பில்வாசிக்கப்பட்ட 
அறிக்கையிலிருந்து ஒரு பகுதி:
இந்தியாவைப் பொறுத்தமட்டில்
வயோதிகம் என்ற பிரச்சினைக்கு 
இடமே இல்லை. 
அது ஒரு கவலை தரும் 
விஷயமே இல்லை. 
வயோதிகர்கள்” என்று ஒரு 
தனிப்பட்ட பிரிவினராக 
அவர்களைக் கருதி அவர்களுக்காக 
பிரத்தியேகமான வழிமுறைகளைக் 
கொண்டுவர வேண்டிய 
அவசியமே இல்லை.

மேலும் சொல்கிறது அந்த அறிக்கை: -
குடும்பமும் சமூகமும், 
வயோதிகர்களை எப்படி நடத்த 
வேண்டும் என்பதைக் காலம்காலமாக 
எங்கள் மதகலாச்சாரசமூகக் கோட்பாடுகள்
விரிவாகச் சொல்லிவந்திருக்கின்றன.
வயோதிகர்கள் பிரச்சினையில் 
அரசு  நேரடியாகக் குறுக்கிடாமல்
ஒரு ஆதரவான போக்கைத்தான் 
(supporting role)
கடைப்பிடித்துவருகிறது. 
இதுவரை குழப்பம் ஒன்றும்  இல்லாமல் 
எல்லாமே சுமுகமாகத்தான் 
போய்க் கொண்டிருக்கிறது.

ஆஹாஎன்ன அழகான வர்ணனை!

நாம் இப்பொழுது இருப்பது 2012.

“Non issue” - (பிரச்சினையே இல்லை) 
என்று கருதப்பட்ட ஒரு விஷயம்
கடந்த 30 ஆண்டுகளில் கவலையைத் 
தரும் விஷயமாக மாறிஇன்று  ஒரு பூதாகரப் 
பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.

Tuesday, September 18, 2012

உங்களை வேலையிலிருந்து தூக்கப்போவதற்கான அறிகுறிகள்


"Hire and Fire"  
வேலை கொடுப்போம் - 
வேலையிலிருந்து நீக்குவோம் - 
என்ற கொள்கையைப் பின்பற்றும் 
அமெரிக்கா மற்றும் 
ஐரோப்பிய நாடுகளில் வேலைபார்க்கும் 
நபர்களுக்காக எழுதப்படுகிற 
கட்டுரை இது. 
இந்தியாவிற்குப் பொருந்தாதா?
என்ற கேள்வி எழலாம். 
ஆனால் இந்தியா 
ஒரு "Hire only" நாடாச்சே
"Fire"  பண்ணுவது என்பது 
எப்போதாவது நடக்கும் 
அதிசய நிகழ்ச்சி அல்லவா?

எப்படியோ"அவரைப் பிடிச்சு
இவரைப் பிடிச்சு 
வேலையை வாங்கிவிட்டால் 
(குறிப்பாகசர்க்காரிலோ,
தொழிற்சாலையிலோ) 
ரிடயர் ஆகும்வரை நிம்மதியாகக் 
காலத்தைக் கடத்திவிடலாம். 
வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள் 
என்ற பயமே இல்லாமல்
அவரவர்கள் தொழில் தர்மத்தை 
நடத்திக்கொள்ளலாம். 
ஏதாவது தப்பு-தண்டா 
பண்ணி மாட்டிக்கொண்டால் 
(operative word -மாட்டிக்கொண்டால்) 
மிஞ்சிமிஞ்சி ஒரு 
தண்ணி இல்லாத காட்டிற்கு  
மாற்றப்படுவார்கள். 
இந்தக் காலத்தில் அது ஒரு 
தண்டனையாகவே கருதப்படுவதில்லை. 
ஏனெனில்எல்லா இடங்களுமே 
தண்ணி இல்லாதக் காடாகத்தானே 
இருக்கிறது! 
புது மொழியில் சொல்ல வேண்டுமானால் 
வசூல் வராத,பண்ண முடியாத 
இலாகாவுக்கு மாற்றல் செய்யலாம்.
தொழிற்சாலைகளைப் பற்றிக் 
கேட்கவே வேண்டாம். 
முதலாளிக்குத் தொழிற்சாலையை 
ஆரம்பித்து நடத்துவதுதான் வேலை. 
நஷ்டம் அடைந்து தொழிலை மூடலாம் 
என்று அவர் நினைத்தால் அது 
மகா பெரிய தேசத் துரோகமாகக் 
கருதப்படும்.
இப்படி  Hire only -No Firing 
என்ற கொள்கையைத் 
தொடர்ந்து ஆதரிக்கும் நாட்டில் 
யாரைஎப்படி வேலையை 
விட்டுத் தள்ளுவது
வேலை போய்விடும் என்ற 
பயமில்லையானால்
accountability - கடமை உணர்ச்சி 
எப்படி வளரும்?
மேல் நாடுகளில் நிலைமை வேறு.

Tuesday, September 11, 2012

10 "முடியாதது”கள் (Cannots)


முடியாததுஎன்ற வார்த்தையையே 
அகராதியிலிருந்து எடுத்துவிட வேண்டும் 
என்பது சுய ஊக்கம் தரும் (Self Motivation) 
பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் அடிக்கடி 
வற்புறுத்தும் வாக்கியம்.

உன்னால் முடியும்என்ற நம்பிக்கையை 
வளர்க்க வேண்டியது அவசியம்தான். 
ஆனால், “எல்லாமே முடியும்என்ற 
வாதத்தை ஒத்துக்கொள்ள முடியாது. 
ஒரு விளையாட்டான உதாரணம். 
ஒரு நாடகத்தில் நாகேசுக்கும் 
மேஜர் சுந்தர்ராஜனுக்கும் வாதம். 
மேஜர் சொல்லுவார்,  
என்னால் எது வேணுமானாலும் 
செய்ய முடியும்” என்று சவால் விடுவார்.

நாகேஷ் பதிலுக்கு சார், தோற்றுவிடுவீர்கள். 
எங்கே, டூத்பேஸ்ட் டியூபிலிருந்து வெளிவரும் 
பேஸ்டை மறுபடி டியூபுக்குள் வையுங்கள்
பார்க்கலாம்.என்பார். 
ஜோக்தான்! ஆனால் சிந்திக்க வேண்டிய 
விஷயம்தானே. 
இதே மாதிரி-, நிறைய முடியாததுகளை 
நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கிறோம். 
சில முடியாததுகளை நாம் கட்டாயம் 
ஆராய்ந்து செயல்பட வேண்டும். 
அப்படிபட்ட 10 ‘முடியாததுகளைப் 
பற்றி இப்பொழுது பார்ப்போம்.

இவை சமீப காலத்தில் 
எழுதப்பட்டவை அல்ல. 
100 ஆண்டுகளுக்கு முன்னால் 
ஒரு பாதிரியாரால் எழுதப்பட்டவை. 
அப்பப்போ,இதை ஞாபகப்படுத்திக்கொண்டு 
அரசியல்வாதிகளில் சிலர் இதைப் 
பயன்படுத்திக்கொள்வார்கள்.

யார் இந்தப் பாதிரி
இதோ, அவருடைய Bio-data.

Tuesday, September 04, 2012

தர்மத்திற்கும் தர்மத்திற்கும் யுத்தம் நடந்தால்! வெற்றி யார் பக்கம்?


தலைப்பில் எழுத்துப்  பிழை இருக்கிறதோ 
என்று நினைக்கத் தோன்றும்
ஏனெனில் காலகாலமாக எல்லா 
கலாச்சாரங்களிலும்  எல்லா மொழிகளிலும் 
சொல்லப்பட்ட, எழுதப்பட்ட நீதிக் கதைகள் 
எல்லாமே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் 
நடந்த மோதல்களைப் பற்றித்தான் 
விளக்கிஇருக்கின்றன. 
எல்லாக் கதைகளின் மையக் கருத்தும் 
ஒரே மாதிரிதான். 
ஒரு கதாநாயகன் (ஹீரோ) - 
தர்மத்தின் மொத்த உருவம். 
ஒரு வில்லன் - 
அதர்மத்தின் மறு அவதாரம். 
இரண்டு பேருக்கும் மோதல். 
முடிவு, தர்மம்தான் வெற்றி அடையும். 
அதர்மம் தோல்வி அடையும்.

குறும்புதனத்திற்காக, முடிவை மாற்றி 
அமைக்க யோசித்தால் - 
வில்லன் வெற்றி பெறுவதாக - 
வாசகர்கள், "முடிவு நன்றாக இல்லை" 
என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.

"நமக்கேன் வம்பு" என்று 
கதை எழுதுபவர்களும் 
"Beaten Track " ஐப்   பின்பற்றித்  
தங்கள் தொழிலைத்  
தொடர்ந்து நடத்துகிறார்கள்.

ஆனால், எல்லாக் கதாசிரியர்களும், 
"அரைத்த மாவையே அரைப்பார்கள்" 
என்று சொல்ல முடியாது. 
இந்தக் கதாசிரியர் தலைப்பில் சொன்ன 
வித்தியாசமான கேள்வியைக் கேட்டு, 
விடை என்ன என்று ஒரு கதை மூலம் 
விளக்குகிறார்.
யார் இந்த ஆசிரியர்?
மகாபாரத இதிகாசத்தையும் பத்ம, விஷ்ணு, 
கருட முதலிய 18 புராணங்களையும் எழுதிய 
வேத வியாசர்தான். 
இந்தக் கதையின் சொந்தக்காரர். 
வேத வியாசர் எழுதிய 18 புராணங்களில் 
மார்க்கண்டேயப் புராணம் ஒரு அருமையான 
காவியம். 
அதில்தான் இந்தக் கதை வருகிறது. 
இப்பொழுது கதையைப் பற்றித் 
தெரிந்துகொள்ளலாமா?

Monday, August 27, 2012

மின்னல் செய்தி - நடந்து கொண்டிருக்கிறது "போர்"- அமெரிக்காவில்


இது என்ன புருடாசெய்தி
ஏப்ரல் முதல் தேதி கூட இல்லையே?
ஆனால் இது உண்மை. 
இந்தப் போர் நீங்கள் நினைக்கிற 
மாதிரி ஆயுதங்களோடுப் போராடும் 
உலக யுத்தம் இல்லை.
இது ஒரு பனிப்போர்.
நடப்பது எங்கே
அமெரிக்காவில் சில பல வீடுகளில், 
குறிப்பாகசமையல் அறை மேஜையில்: 
சார், குழப்பாதீர்கள்! 
தலையைப் பிய்த்துக்கொண்டு 
தெருவில் ஓடுவதற்குமுன் தயவுசெய்து 
புரியும்படி சொல்லுங்கள்என்று 
நீங்கள் அலறுவது கேட்கிறது. 
இதோ, அந்தப் போரின்விளக்கம்.