Sunday, December 23, 2012

அமெரிக்கக் குழந்தைகளுடன் ஒரு இனிமையான கலந்துரையாடல்



மேலேயுள்ள படத்தில் இருப்பது -
 "நாந்தேன்". 
என்னுடன் இருக்கும் குழந்தைகள் - 
(இடமிருந்து-வலம்)
நேகா குமார்,மயூகா கார்திக்
சோனிதா சீனிவாசன்,
நேகா அரவிந்த், தீக்ஷா அய்யர்.
தலைப்பைப் பார்த்தவுடன் 
"வெள்ளைக்கார" அமெரிக்கக் 
குழந்தைகளை எதிர்பார்த்தவர்களுக்கு 
ஏமாற்றமாக இருக்கலாம். 
இங்கேயிருக்கும் குழந்தைகள் எல்லாம் 
அமெரிக்காவில் பிறந்து, படித்துவருகிற 
இந்தியத் தமிழ்க் குழந்தைகள். 
இந்தியத் தமிழ் வேர்களை மறக்காத 
குழந்தைகள். அதற்காக முழுப் பாராட்டும் 
அவர்களுடைய பெற்றோர்களைத்தான் 
சேரும். இந்தியாவில் படித்து 
வேலை தேடி வந்த 
இந்தப் பெற்றோர்கள் - 
இவர்கள் மாதிரி 
நிறையப் பேர் இருக்கிறார்கள் - 
தங்கள் குழந்தைகள் இந்திய/தமிழ்க் 
கலாச்சாரத்தை மறந்துவிடக் கூடாது 
என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 
Sunday Schoolக்கு அனுப்பி 
ஸ்லோகங்கள்தியானம், கீதை மூலம் 
தெய்வ பக்தியை வளர்ப்பதோடு 
இல்லாமல் தமிழ் மொழியைக் 
கற்றுத்தர ஏற்பாடுகளும் செய்கிறார்கள். 
‘Yatra’ விளம்பரத்தில் வரும் குழந்தைகள் 
மாதிரி இவர்கள் இருக்க மாட்டார்கள் 
என்பது ஒரு வரவேற்கத் தகுந்த விஷயம்.

(யாத்ரா விளம்பரத்தில்)
அம்மா காலையில் 
அறைஅறையாகச் சென்று 
சாம்பிராணி புகையைக் 
காட்டி வருகிறாள். 
அமெரிக்க பெண்மணி கேட்கிறாள் 
"உங்கம்மா என்ன செய்கிறாள்?" 
பையன் சொல்கிறான் 
"என் அம்மா, தினந்தோறும் 
fire alarm சரியாக இருக்கிறதா 
என்று செக் பண்ணுகிறாள்." 
விளம்பரத்தின் பஞ்ச் லைன் 
'Before they forget their roots, 
take them to India.

சரி விஷயத்திற்கு வருவோம்...
இந்தக் குழந்தைகள்LEGO 
என்ற ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள். 
இது குழந்தைகளின்"creative" 
ஆர்வத்தை வளர்க்க உதவும் 
ஒரு ஸ்தாபனம். 
"சீனியர் சிட்டிசன்" பற்றி 
ஒரு project பண்ணுகிறார்கள். 
அதற்காக, என்னை 
interviewக்கு கூப்பிட்டார்கள். 
என் நண்பர் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை 
மாலை இந்தக் குழந்தைகளைச் சந்தித்தேன். 
அவர்கள் பெற்றோர்களும் இருந்தார்கள். 
"என்ன பேச வேண்டும்" 
என்று கேட்டபோது
நண்பர் நந்தா சொன்னார் 
"நீங்கள் ஒன்றும் தயார் செய்துகொண்டு 
வர வேண்டாம். குழந்தைகள் கேட்கும் 
கேள்விகளுக்கு நீங்கள் பதில் 
சொன்னால் போதும்" என்றார்.

"சரி" என்று சரியாக ஆஜரானேன். 
ஆச்சரியம் ஒவ்வொரு குழந்தையும் 
ஒரு ipadஐ வைத்துக்கொண்டு 
என்னை interview பண்ணத் தயாரானார்கள். 
முதலில் இந்தச் சந்திப்பைக் 
கொஞ்சம் casual 
ஆகத்தானே எடுத்துக்கொள்ள 
நினைத்தேன். 
கொஞ்ச நேரத்தில் தெரியவந்தது
இவர்கள் எமகாதகக் குழந்தைகள் 
என்று. முன்னேற்பாடாகக் கேள்விகளைத் 
தயார்பண்ணிக் கொண்டுவந்திருந்தார்கள். 
இதோ அந்தக் கலந்துரையாடலின் 
சுருக்கம். 

Tuesday, December 18, 2012

‘ஜென்டில்மேன்’ ஆவது எப்படி?


                
இதற்கு விடை தேடும் முன் 
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

யார் ஜென்டில்மேன்?’
ஜென்டில்மேன் பற்றிய விளக்கத்தை 
இரண்டு கோணங்களில் அணுகலாம். 
ஒன்று - "இது இல்லை, அது" என்ற 
தத்துவ ஆசிரியர்கள் அணுகும் முறை. 
அதாவது
இந்த மாதிரி குணங்கள் உள்ளவர்கள்
ஜென்டில்மேனாக இருக்க மாட்டார்கள்’ 
என்ற விளக்கம். 

இரண்டாவது
பாஸிடிவ்வாக
ஜென்டில்மேன் என்பவர்கள்
"இப்படித்தான் நடந்துகொள்வார்கள்" 
என்ற விளக்கம்.
முதலாவது விளக்கத்தைத் 
தினசரி வாழ்க்கையில் 
அன்றாடம் சந்திக்கிறோம். 
இதோ சில காட்சிகள்.

சீன் 1:
வீட்டு டைனிங் டேபிளில் - 
சாப்பாட்டு நேரம். 
எல்லோரும் சாப்பிட 
உட்கார்ந்திருக்கிறார்கள். 
மகன், வாயில் உணவை வைத்துக்கொண்டு 
அதிகார தோரணையில் சத்தம்போட்டு 
ஏதோ உத்தரவு போடுகிறான். 
மகள் செல்போனில் யாருடனோ 
இரைந்து பேசிக்கொண்டு 
சாப்பாட்டில் அரைகுறை கவனத்தோடு 
செயல்படுகிறாள். 
அப்பாக்காரர் ஏதோ தீவிரமாக 
ஆபிஸ் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். 
அம்மாக்காரிக்குக் 
கோபம் பொத்துக்கொண்டு 
வருகிறது. கத்துகிறாள். 
"இது என்ன சாப்பாட்டு இடமா
சந்தைக் கடையா
மகனே, உனக்கு manners இல்லையா
எத்தனை தடவை சாப்பாட்டை 
வைத்துக்கொண்டு பேசாதே 
என்று சொல்லியிருக்கிறேன். 
நீ என்றுதான் 
ஒரு ஜென்டில்மேன் 
ஆகப்போகிறாயோ! 
மகளே, உன் செல்போன் 
manners சகிக்கலை. 
ஒரு பொறுப்புள்ள பெண்ணாக 
இரு. இல்லையானால் செல்போனைப் 
பிடுங்கிவிடுவேன். 
பெரியவரே
ஆபிஸ் மூட்டையை 
ஒதுக்கிவைத்துவிட்டு
ஒரு லட்சணப் புருஷனாகச் 
சாப்பிடுங்கள். 
கஷ்டப்பட்டு சமைத்த 
என் சாப்பாட்டை ஒருமனதாக 
ரசித்து சாப்பிட்டு 
நீர் ஒரு ஜென்டில்மேன் 
என்று நிரூபித்து
உங்கள் பிள்ளைகளுக்கு 
ஒரு எடுத்துக்காட்டாக இரும்" 
என்றாள்.

சீன் 2:
காலேஜ் லெக்ஸர் ஹால்.
புது வாத்தியார் - ஒரே ரகளை - 
கூச்சலும் கும்மாளமும். 
வாத்தியார் கத்துகிறார்.
"Shut up. Behave yourself. 
பொறுக்கித்தனமாக 
நடந்துகொள்ளாதீர்கள். 
ஜென்டில்மேனாக இருக்க 
முயற்சி பண்ணுங்கள். 
நீங்கள் காலேஜ் மாணவர்கள். 
தெருப் பொறுக்கிகள் இல்லை."
சீன் 3:
ஒரு வியாபாரிக்கும் 
அவருடைய வாடிக்கையாளருக்கும் 
நடக்கும் உரையாடல்.
வாடிக்கையாளர்:  என்ன சார்
account statement 
அனுப்பவில்லையே
பணம் வேண்டாமா?
வியாபாரி: சார், நாங்கள் 
எப்பொழுதும் ஜென்டில்மேனிடம் 
பணம் கேட்டுத் தொந்தரவு 
செய்ய மாட்டோம்.
வாடிக்கையாளர்: அப்படியா
அவர் பணம் செலுத்தவில்லை
என்றால் எப்படிச் சமாளிப்பீர்கள்?
வியாபாரி: அது ஒன்றும் பெரிய 
விஷயம் இல்லை. 
கொஞ்ச நாளில் பணம் 
வரவில்லையானால் 
அந்த நபர் gentleman இல்லை 
என்று முடிவுசெய்து பணத்தைக் கேட்டு 
ஆள் அனுப்புவோம்.
வெவ்வேறு விதமான 
மனிதர்கள்
எப்படியெல்லாம் ஜென்டில்மேன்’ 
தகுதியை இழக்கிறார்கள் 
என்பதற்கான விளக்கங்கள்தான் 
மேலே சொன்ன காட்சிகளிலிருந்து 
தெரியவருகிறது.

Monday, December 10, 2012

வயதான பெற்றோர்களை அலட்சியப்படுத்துவது, துன்புறுத்துவது (Parent Abuse) - ஒரு மன்னிக்க முடியாத குற்றம்.



அநேகமாக, நம்மில் எல்லோருமே, சீக்கிரமாகவோ, கொஞ்ச நாள் கழித்தோ, சந்திக்க வேண்டிய நிலைமை 
நம் வயதான பெற்றோர்களை 
எப்படிப் பார்த்துக்கொள்ளப்
போகிறோம் என்பது.
பொருளாதார வளர்ச்சியினாலும், மருத்துவத் துறையில் ஏற்பட்ட 
மகத்தான மாறுதலினாலும், பெரும்பான்மையான மக்கள் 
நீண்ட நாட்கள் வாழும் 
வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். 
அதே பொருளாதார வளர்ச்சி
மக்கள் மனத்தையும் ஓரளவு பாதித்திருக்கிறது.

வயதான பெற்றோர்களை 
ஒரு பாரம்என்று நினைக்கும் 
ஒரு மனநிலை இன்றைய 
இளைய தலைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது 
என்பது ஒரு வெட்கப்பட 
வேண்டிய விஷயம்.

மாமியார் கொடுமை’, 
குழந்தைகள் கொடுமைபற்றி 
நிறையவே மீடியாக்களில் 
பேசப்பட்டு, எழுதப்பட்டுவருகின்றன. 
ஆனால் parent abuse - 
பெற்றோர்களைக் 
கொடுமைப் படுத்துவது 
என்பது அவ்வளவாக வெளிச்சம் 
போட்டுக் காட்டப்படவில்லை. 
ஆனால், அந்த மாதிரி 
பெற்றோர் கொடுமைநடந்துகொண்டிருக்கிறது 
என்பது தான் உண்மை. 

Wednesday, December 05, 2012

சிரிக்கிறவன் நீண்ட நாள் வாழ்கிறான் (He who laughts- lasts)


64 வாரங்களாகத் தொடர்ந்து 
serious விஷயங்களைப் பற்றி 
எழுதிவந்த நான்
ஒரு மாறுதலுக்காக
ஒரு light ஆன விஷயத்தைப் 
பற்றி எழுதலாம் 
என்று நினைக்கிறேன்.
சிரிப்பைவிட (laughter) 
ஒரு 'light' ஆன விஷயம் 
இருக்க முடியாது.
அதனால், இந்த வாரம்
ஒரு 'நகைச்சுவை' வாரம்.
இங்கே சொல்லப்பட்டிருக்கிற 
நகைச்சுவை விஷயங்களோ
கொடுக்கப்பட்டிருக்கிற 
வீடியோக்களோ புதிதாக இருக்காது. 
தெரிந்ததை மறுபடியும் படிப்பது 
கொஞ்சம் "போரான" சமாச்சாரம்தான். 
ஆனால், நகைச்சுவை மாறுபட்ட விஷயம். 
வாழைப்பழத் தோலை மிதித்து 
வழுக்கி விழுந்த காட்சியை 
எத்தனை தரம் பார்த்தாலும், நினைவுபடுத்திக்கொண்டாலும் 
சிரிப்பு இன்னும் வருகிறதல்லவா?
அதனால், இந்தப் பகுதியைப் படிக்கும் 
வாசகர்களிடம் ஒரு சிறு புன்னகையாவது 
தோன்றும் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன்.

டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சமூக நல விஞ்ஞானிகள் என்று மனித உடல்நலத்தில்அக்கறைகொண்ட 
அத்தனை படித்தவர்களும் 
ஒரு மனதாக ஒத்துக்கொண்ட விஷயம்
"மருந்துகளில் சிறந்த மருந்து, சிரிப்பு" - 
Laughter is the best medicine.
அநேக ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 
அவர்கள் சொன்னதன் கருத்து:
சிரிப்பு அவசியம்.

Monday, November 26, 2012

சாணக்கிய நீதி



சாணக்கியர்’-
என்று சொன்னவுடன்
நம்மில் பலர் மனதில் 
தோன்றுவது
அவருடைய அவிழ்ந்த குடுமியும் 
அவர் எடுத்த சபதமும்தான்.
பாஞ்சாலிசபதத்திற்குப் பிறகு 
வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் - 
சாணக்கிய சபதம்தான்.
கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து
தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது - 
பாஞ்சாலி சபதம். 
நந்தர்களின் ஆட்சியை அழித்து
சந்திரகுப்தரை மன்னராக்கி
குப்தர் பொற்காலத்திற்கு 
அடிகோலியது - 
சாணக்கிய சபதம்’.
சாணக்கியருடைய சபதம் போல்
அவர் எழுதிய அர்த்த சாஸ்திரமும் 
உலகப் பிரசித்தி பெற்றவை.
அர்த்த சாஸ்திரம், ஒரு statecraft 
புத்தகம். 
அதாவது அராசங்கமும் அரசனும் 
எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும் 
என்பதை விளக்கும் நூல்.
இது சரித்திரம் படித்த 
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
பல பேருக்குத் தெரிந்திருக்க 
வாய்ப்பில்லாத விஷயம் — 
இதே சாணக்கியர், மனிதனுடைய 
வாழ்வு வளம்பெற, ஒரு நீதி சாஸ்திர 
நூலையும் இயற்றியிருக்கிறார். 
அதுதான் சாணக்கிய நீதி’ என்ற நூல்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் 
வெவ்வேறு சமயங்களிலும் 
பெரிய மஹான்கள்,
மானிடர்கள் நலம்பட
நல்ல கருத்துக்களை
போதித்திருக்கிறார்கள்.
தமிழில் திருக்குறள்
ஒளவையாரின் நல்வழி
மூதுரை ஆகிய நூல்கள்
உலக நீதி போன்றவை 
பிரசித்தம். 
வடமொழி இலக்கியத்தில்,  
சுக்ரநீதி, மனுநீதிவிதுரநீதி 
என்று பல நூல்கள் உள்ளன. 
அவற்றில் சாணக்கிய நீதியும் 
ஒரு சிறந்த நூலாகப் புகழப்படுகிறது. 
இதில், இன்னொரு விஷயம்
மற்ற நீதிகளின் ஆசிரியர்கள் 
புராண, இதிகாச மனிதர்கள். 
ஆனால் சாணக்கியர்
ஒரு சரித்திர கால புருஷர். 
2500 ஆண்டுகளுக்கு 
முன் வாழ்ந்தவர். 
அவரைப் பற்றிய கதைகள்
சரித்திர நிரூபணம் 
இல்லாத கதைகளாக இருந்தாலும்
அவர் வாழ்ந்த காலம்
அவர் ஈட்டிய பணிகள்
அவர் எழுதிய காவிய நூல்கள் 
சரித்திர ஆசிரியர்கள் 
ஏற்றுக்கொண்டவை.
சாணக்கிய நீதியில் என்ன 
நல்ல விஷயங்கள் 
சொல்லப்பட்டிருக்கின்றன
என்பதைப் பார்க்கும் முன் 
அதன் ஆசிரியர், சாணக்கியரைப் 
பற்றிக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்
கொள்வோம்.

Tuesday, November 20, 2012

முதியோர்களை வெறுத்து ஒதுக்குவது சரியா?


தவறு-என்கிறது, 
எல்லா நாடுகளிலும் சொல்லப்படும்
கர்ண பரம்பறை கதைகள்.

அதற்கான ஒரு திருஷ்டாந்த கதை……..

ஒரு ஊரில்,ஒரு ராஜா இருந்தார்.
அவருக்கு நல்ல ஆலோசனை சொல்ல,
எப்போதும், அவருடன் நிறைய
முதிய அறிவாளிகள் இருந்தனர்.
ராஜ்யம் செழிப்பாக இருந்தது. 
மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். 
அந்த ராஜாவுக்கு ஒரு மகன்.
அவனுக்கு அவன் அப்பாவுடன் 
இருக்கும் முதியோர்களை 
கண்டாலே பிடிக்கவில்லை.
"இந்த கிழங்கள் எல்லாம் 
பழைய கொள்கைகளை 
கடைப்பிடித்து நாட்டை 
கெடுக்கின்றனர்.
நான் பதவிக்கு வந்தவுடன் 
இவர்களுக்கு ஒரு வழி பண்ணுகிறேன் "
என்று கருவிக் கொண்டிருந்தான்.

ராஜா காலமானார்.
பையன் ராஜாவானான்.
முதல் வேலையாக,
எல்லா முதியோர்களும்
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் 
என்று உத்தரவு போட்டான்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
"முதுமை கெட்டது-இளமை நல்லது" 
என்ற மன நிலையில் இருந்த 
ராஜா தன் முடிவை மாற்றிக் 
கொள்ளவில்லை. 
எல்லா முதியோர்களும் நாட்டை 
விட்டு  வெளியேறினார்கள்.
ராஜா தன்னைச் சுற்றி ஒரு இளைஞர் 
கூட்டத்தை சேர்த்துக் கொண்டான்.

எங்கும்,அழுகை குரல்-
ஒரு வீட்டைத் தவிர..

Monday, November 12, 2012

என்னை நினைவு இருக்கிறதா? நான் தான் உங்கள் தாயின் மணிக்கொடி

பாரத தாயின் அருமை குழந்தைகளே!
நான் தான், உங்கள் தேசிய கொடி.
முதலில், என் தீபாவளி வாழ்த்துக்கள்.
நோய் நொடி இல்லாமல் வாழ, என் ஆசிகள்.

ரொம்ப நாளாகவே என்னுள் ஒரு உறுத்தல்.
உங்களிடம் பேசித்தான் ஆக வேண்டும்-
இது உங்களையும் என்னையும் பற்றியது.
"அதற்கு இது தான் நேரமா? 
நல்ல நாளும் அதுவா?"
என்று கேட்பது,புரிகிறது.
அதற்கு காரணம்,
நான் எப்படி தேசம் பூராவுக்கும் 
சொந்தமோ,அதே மாதிரி,
தீபாவளி ஒன்று தான்,ஒரு தேசிய 
பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அதனால் தான், இந்த 
சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுத்தேன்.

எனக்கு நல்ல நினைவு இருக்கிறது..
1947,ஆகஸ்ட் 15,சுதந்திர தினம்.
எப்படி எல்லாம் எனக்கு மரியாதை செய்து
"தாயின் மணிக் கொடி பாரீர் "
என்று கோஷம் போட்டு,என் முன் 
"ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"
என்று ஆடி பாடி, நீங்கள் மகிழ்ந்தீர்கள்,
என்பது -ஒரு பசுமையான நினைவு.
அதே மாதிரி,
நம்முடைய முதல் குடியரசு தினம்-
ஜனவரி,26,1950.மறக்க முடியுமா?

என்னைப் பற்றிய, அந்த உற்சாகம் ,
உங்களில் எத்தனை பேருக்கு 
இன்னும் இருக்கு?-

சங்கடமான கேள்வி
விடை சுலபம்.
இல்லவே இல்லை.
Zero enthusiasm--
மன்னிக்கவும்..
வருடத்தில் 2 நாட்கள், நீங்கள் 
நிச்சயாமாக என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய 
கட்டாயத்தில் இருக்கிறீர்க்ள்.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,
சம்பிராதய சடங்குகள்.
அவ்வளவு தானா,என் Roll?

Wednesday, November 07, 2012

எதிர்மறையாகவே இயங்கும் உலகத்தில் நம்பிக்கையுடன் (Positive) வாழ்வது எப்படி?



சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: 
"ஒரு நாளில்நீங்கள் எந்தப் 
பிரச்சினையையும் சந்திக்கவில்லை 
என்றால்நிச்சயமாக நீங்கள் 
ஏதோதப்பான வழியில் 
பிரயாணம் செய்துகொண்டிருக்கிறீர்கள்."
(In a day, when you don't come 
across any problem, 
you can be sure that 
you are travelling a wrong path)
சுவாமிஜி இதை ஒரு ஜோக்காகச் 
சொல்லியிருக்க மாட்டார். 
சொன்னது
அவர் வாழ்ந்த வாழ்க்கைச் 
சூழ்நிலையில்
அதாவது 100 ஆண்டுகளுக்கு 
முன்னால். 
"பிரச்சினை இல்லாத மனித வாழ்க்கை 
இருக்க முடியாது" என்று சொன்ன 
சுவாமிஜி
பிரச்சினையே வாழ்க்கையாக 
மாறிவிட்டிருக்கும் 
இந்தக் காலத்தைப் பற்றி 
எப்படி வர்ணித்திருப்பார்?
அலுத்து, வெறுத்துப்போன சூழ்நிலை-  
எங்கு திரும்பினாலும். 
ஒரு லிஸ்ட் போடலாம் என்றால்
எவ்வளவு நீளம் அது போகும்
எதைச் சேர்க்கணும்
விலைவாசி, பவர்கட்
பெட்ரோல் விலைசுகாதாரம்
கொலை, கொள்ளை
கற்பழிப்புஏமாற்றல்
ஒழுங்கின்மைலஞ்சம்
கோவில் சொத்து திருடுபோவது
scandals, scams  etc... etc...
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு 
விதத்தில் வெவ்வேறு பரிமாணத்தில் 
இந்தப் பிரச்சினைகள் தாக்குகின்றன.
"சர்வம், பிரம்ம மயம் ஜகத்" — 
இந்த உலகம் முழுவதும் 
"பிரம்மம்" என்பது வேத வாக்கு. 
இன்றைய புது மொழி: 
"சர்வம் டென்ஷன் மயம் ஜகத்". 
எல்லாமே டென்ஷன்’. 
டென்ஷன்’ வந்தால் stress. 
stress வந்தால் 
எல்லா வியாதிகளும் 
தேடி வரும். 
நிம்மதி போய்விடும்.
எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” 
என்று பாடத் தோன்றும்.
இப்படி இருக்கிற 
எதிர்மறை உலகில் 
எப்படி நிம்மதி கிடைக்கும்
எப்படி பாஸிடிவாக வாழ முடியும்?
தர்மர், அரிச்சந்திரன் போன்ற 
புராணகால மனிதர்களால் 
இன்றைய சூழ்நிலையில் 
வாழ முடியுமா?
முடியும்- என்கிறார்கள், 
மகான்கள்படித்த பெரியோர்கள். 
சொல்லில் மாத்திரம் இல்லை
வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பெரியோர்கள் சொல்லும் 
வழி ரொம்ப சிம்பிள்.

Wednesday, October 31, 2012

‘அமெரிக்கா’ பிடிச்சிருக்கா?'




கடந்த 10 ஆண்டுகளாக, நானும் என் மனைவியும் எப்போதெல்லாம் அமெரிக்காவிலிருந்து 
இந்தியாவிற்குப் போகிறோமோ அல்லது இந்தியாவிலிருந்து வரும் யாரையாவது 
சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் எங்களிடம் கேட்கப்படுகிற கேள்விகள்: 
என்ன, அமெரிக்காவிலேயே செட்டில் 
ஆகிவிட்டீங்களே, எப்படி இருக்கிறீங்க
அமெரிக்கா பிடிச்சிருக்கா
சந்தோஷமாக இருக்கிறீங்களா?’

இவை ஒரு சம்பிரதாயத்திற்காகக் 
கேட்கப்படுகிற கேள்விகள் என்று நாங்கள் 
நினைத்தது கிடையாது. 
பலரிடம் எங்களைப் பற்றி 
ஒரு genuine concern  ஏற்பட்டதால் 
எழுந்த கேள்விகள்தான் என்று நினைக்கிறோம்,

60 ஆண்டுகளாக, ஒரு தனி அடையாளத்தோடு’ 
இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிப்போன 
2 கிழங்கள் எப்படி வயதான காலத்தில் 
ஒரு புதிய சூழ்நிலையில் தங்கள் கடைசிக் 
காலத்தைக் கழிக்கப்போகிறார்கள்’ 
என்ற கவலை அவர்களில் பலருக்குத் தோன்றியிருக்கலாம். 
அவர்களுக்கு மட்டுமில்லை. 
ஆரம்ப காலத்தில் எங்களுக்கும் 
இந்த முடிவை எடுக்கும் முன் 
கொஞ்சம்’ பயம் இருந்தது.

கொஞ்சம்தான்.

ஏனெனில், எங்கள் முடிவு அமெரிக்காவைப் 
பற்றியது அல்ல.