Friday, January 25, 2013

பெரு நாட்டில் நவராத்திரி - பகுதி 3 அமேசான் மழைக்காடுகள்





"காடு, மலைவனாந்திரம்
ஏழு கடல்களைத் தாண்டி 
கதாநாயகன் கதாநாயகியை 
அரக்கனிடமிருந்து மீட்கச் சென்றான்" 
என்று பெரிய எழுத்து மதனகாமராஜன் 
கதைகளில் படித்திருக்கிறோம். 
நாங்களும் அதே மாதிரி, விமானம்
கார்விசைப்படகு
காட்டில் நடை, தோணிச் சவாரி 
என்று கஷ்டப்பட்டு எங்கள் 
லாட்ஜை அடைந்ததைப் 
பற்றி எழுதியிருந்தேன். 
ஒரு வித்தியாசம் நாங்கள் 
கதாநாயகி யாரையும் 
தேடிப் போகவில்லை. 
அமேசான் மழைக் காடுகளில் 
2 இரவுகள் 3 நாட்கள் தங்கி
நம்முடைய ரிஷிகள் காட்டில் 
எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் 
பார்க்க ஆவலுடன் சென்றோம்.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் பெயர் 
Sandoval Lake Lodge - 
பெயரில் இருக்கிறபடி Sandoval 
என்ற ஒரு பெரிய ஏரிக் கரையில் 
இருக்கிறது.












அநேகமாக எல்லாப் பயண விடுதிகளும் 
இந்த ஏரிக் கரையில்தான் இருக்கின்றன.
நாகரிகத்திலிருந்து தூர விலகி 
நடுக் காட்டில் இருக்கும் சுவையான 
அனுபவத்தைக் கொடுப்பதற்காக 
இந்த ஏற்பாடு. பயணிகளுக்குத் 
தேவையான எல்லாப் பொருள்களும் 
homeland இலிருந்துதான் 
கொண்டுவர வேண்டும். 
குறிப்பிட்ட நேரத்தில் வரும் 
மின்சாரத்தைத் தவிர மற்ற எந்த 
வசதியிலும் குறைவில்லை. 
இரவுகள்,3 நாட்கள் 
போனதே தெரியவில்லை. 
மழை தொடர்ந்து பெய்தாலும் 
செலவழித்த நேரத்தில் 
பெரும் பகுதி, வெளிப்புறத்தில்தான். 

அதற்குத்தானே வந்திருக்கிறோம்.

Sunday, January 20, 2013

பெரு நாட்டில் நவ ராத்திரி - பகுதி 2 லீமா, அமேசான் மழைக் காடுகள்.



2ஆம் நாள்-6000 கிலோ மீட்டர் 
தள்ளிப் புது இடத்தில் கண்விழிப்பு. 
களைப்பு ஒன்றும் இல்லை. 
காரணம்,பெரு நாடும், நாங்கள் 
குடியிருக்கும் அமெரிக்க நாட்டு 
New Jerseyயும் 
ஒரே Time Zone - EasternTime 
ஜெட் லாக் ஒன்றும் இல்லாமல்
சுறுசுறுப்பாக எழுந்து 
breakfastஐ நாடி ஓடினோம். 
அநேகமாக,வெளிநாட்டு
ஹோட்டல்களில் எல்லாம் 
bed & breakfastதான் rule. 
Breakfast-free. 
அதுவும் விதவிதமான breakfast. 
ரொட்டிவகைகள்,சீரியல்வகைகள்
பழங்கள், முட்டை, பான்கேக்
ஆம்லெட், ஜாம், ஜூஸ் - 
நம்மைப் போல் இல்லாமல் 
வெளிநாட்டினர்கள் 
breakfastக்கு ரொம்பவே 
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 
ஹோட்டலில் ஒரு பிடி பிடித்து
breakfast சாப்பிட்டால் 
லஞ்ச்என்று வயிறு கேட்காது.
நாங்களும் UA Airlines பட்டினி 
போட்ட அவலத்தை மறந்து 
ஒரு அருமையான breakfastஐ 
ஒரு பிடி பிடித்தோம்.
சரியாக 10 மணிக்கு டிராவல் கம்பெனி 
ஒரு vanஐயும் ஆங்கிலம் தெரிந்த 
ஒரு guideஐயும் அனுப்பிற்று. 
மறந்துவிடாதீர்கள் — 
இது ஒரு ஸ்பானிஷ் பேசும் நாடு. 
எங்கும் ஸ்பானிஷ்தான். 
city tour ஆரம்பித்தது.
லீமா நகரத்தைப்பற்றி கைடு 
சொன்ன கதையின் சுருக்கம் இதோ:
பசிபிக் மகா சமுத்திரத்தின் 
கரையோரத்தில் இருக்கும் லீமா நகரம்
பெரு குடியரசின் தலைநகர். 
1535ஆம் ஆண்டு Francisco Pizaro 
என்ற ஸ்பானியரால் ஸ்தாபிக்கப்பட்டது. 
இதற்கு The City of Kings 
என்று ஒரு செல்லப் பெயர் உண்டு.
13 X 9 Gridஇல் 117 சிடி பிளாக்குகளுடன் 
நகரம் முதலில் கட்டப்பட்டது.
இன்றைக்கு அரசியல் பொருளாதார
வர்த்தகத் தலைநகராக 
தென்அமெரிக்காவில் 
இது புகழ்பெற்றிருக்கிறது. 
இன்றைய ஜனத்தொகை கிட்டத்தட்ட 
9 மில்லியன் ஆக இருக்கிறது. 
அமெரிக்கக் கண்டத்தில்
San Paulo, Mexico City, 
New York Cityகளுக்குப் பிறகு 
லீமாதான் 4ஆவது பெரிய நகரம். 
Beta World City என்ற 
அங்கீகாரமும் இதற்கு உண்டு.
இப்போதைக்கு இந்த அறிமுகம் 
போதும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நகர ஊர்வலம் செல்வோமா?

Friday, January 11, 2013

பெரு நாட்டில் நவராத்திரி- பகுதி 1


நவராத்திரி என்பது நம்மூரில் கொண்டாடப்படும் தேவி பண்டிகையைக் குறிக்கும் சொல் அல்ல. 
‘ 9 நாட்கள்என்பதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு. 
போன வாரமே பெரு நாட்டில் 
என் குடும்பத்தோடு செலவழித்த 
9 நாட்கள் விடுமுறையைப் பற்றி எழுதப்போகிறேன் என்று எச்சரித்திருக்கிறேன்.












3 /4 பகுதிகளாக எழுதப்போகும் 
அந்தத் தொகுப்பின் முதற் பகுதி இதோ:
பயணக் கட்டுரை எழுதுவது இதுதான் என்னுடைய கன்னி (maiden attempt) முயற்சி.

இத்தனை ஆண்டுகளில் நான் படித்த பயணக் கட்டுரைகள் இரண்டுதான்அதுவும் தசரதர் ஆண்ட காலத்தில்”—அதாவது long long ago—ஒன்று, தேவன்  ஆனந்த விகடனில் எழுதிய “5 நாடுகளில் 50 நாள்கள்.இரண்டாவது, பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வெங்கடம்முதல் குமரிவரை”. நானே படிக்காத பயணக் கட்டுரைகளை மற்றவர்களின் மேல் திணிப்பது மனதுக்கு ஒவ்வாத விஷயம்தான். 
இருந்தும், நான் எழுதத் துணிந்ததற்குக் காரணம் நான் விஜயம் செய்த 
தென் அமெரிக்கக் கண்டம் இந்திய மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத கண்டம் என்று என்னுள் எழுந்த 
ஒரு கணிப்பு. 

Friday, January 04, 2013

இன்கா தலைநகரில் கொண்டாடிய ‘வருஷத்திற்கு ஒரு நாள்’



முதலில் இரண்டு விளக்கங்கள்:
வருஷத்திற்கு ஒரு நாள்
இந்துக்கள் வீட்டில் பண்டிகைகளுக்குப் பஞ்சமிருக்காது. என் வீடும், அதற்கு விலக்கல்ல. பிள்ளையார் சதுர்த்தி
சரஸ்வதி பூஜை, மகர சங்கராந்தி... 
இப்படிப் பல பல. எல்லாவற்றிற்கும் 
பொது பூஜை, நைய்வேத்யம். 
என் அம்மாவும் ஒவ்வொரு 
பண்டிகைக்கும் ஏற்ற உணவுப் பொருள்களை நிவேதனத்திற்காகத் தயார்பண்ணுவார்கள்.
சின்ன வயதில் - (தப்பு, தப்பு) 
2003வரை (என் 72 வயதுவரை) 
ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் 
பதார்த்தங்கள் தயாரானவுடன் அவற்றை taste பண்ண, தொட முயற்சிப்பேன். 
நானும் என் அம்மாவும் வழக்கமாகப் பேசிக்கொள்ளும் டயலாக்.
அம்மா: "சனியனே, கட்டேல போறவனே (வயதான பிறகு, இவையெல்லாம் dropped) பிராமணனாகப் பிறந்ததற்கு உருப்படியாக ஏதாவது செய். 
இன்றைக்கு வருஷத்திற்கு ஒரு நாள்போய்க் குளித்துவிட்டு, சுவாமிக்கு 
இரண்டு பூ போட்டுவிட்டு
அப்புறம் வந்து கொட்டிக்கோ." 
(இதுவும் later yearல் dropped).
நான்: "ஏன், அம்மா, எல்லோரும் கட்டையிலேதானே போவா
அதென்ன, வருஷத்திற்கு ஒரு நாள். 
எல்லா நாளும் வருஷத்தில் 
ஒரு நாள் தானே. இன்றைய நாள்
இனிமே அடுத்த வருஷம்தானே 
வரப் போகிறது?" 
அம்மா: "அதிகப்பிரசங்கித்தனம்..."
பிறகு குளித்துவிட்டுப் பூஜை செய்வேன். ஆசையோடு ஒவ்வொரு பட்சணமாகக் கொடுப்பாள். 
( I miss those glorious moments.)
விதண்டாவாதத்திற்காகச் சொன்னாலும் யோசித்துப்பார்த்ததில், 
வருஷத்திற்கு ஒரு நாள்என்ற அடைமொழி சில விசேஷ நாட்களுக்குத்தான் 
பொருந்தும். எல்லோரும் சாப்பிட்டாலும் 
சில பேரைத்தானே சாப்பாட்டு ராமன்என்கிறோம்.
ஆக, இந்துக்கள் வாழ்க்கை என்று இல்லாமல் ஒவ்வொரு மதத்திலும் 
சில விசேஷ நாள்கள் 
வருஷத்திற்கு ஒரு நாள்என்ற 
அடைமொழியைப் பெறுகின்றன.
இந்தச் சில பல  
வருஷத்திற்கு ஒரு நாள்களில் 
ஒரே ஒரு பண்டிகை, விசேஷம்
event மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடிய பண்டிகையாக 
இருந்த நிலைமை மாறி, இன்றைக்கு உலகத்தினர் எல்லோராலும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
சஸ்பென்ஸ் போதும் என்று நினைக்கிறேன். அதுதான்- New Year Eve /புது வருஷம் ஆரம்பத்தைக் கொண்டாடுவது. 
நான் கொண்டாடிய 
வருஷத்திற்கு ஒரு நாள்’. 
2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி.
இரண்டாவது விளக்கம்.
இன்கா தலைநகர்
நான் என் குடும்பத்தோடு
New Year Eveயும் புது வருஷ ஆரம்பத்தையும் கொண்டாடியது, 
இன்கா தலைநகரில்.
இதென்ன,கேள்விப்படாதப் பெயராக இருக்கிறது என்று சில பேர் நினைக்கலாம். ரோம, கிரேக்க, எகிப்திய, குப்த
விஜய நகர சாம்ராஜ்யங்கள் போல் 
இன்கா சாம்ராஜ்யமும் பிரபலமான 
ஒரு சாம்ராஜ்யம்.
இன்கா (Incas) என்ற பிரிவினர் ஸ்தாபித்த இந்த சாம்ராஜ்யம் 13/14ஆம் நூற்றாண்டில் தென்அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 
இதனுடைய மையம் தற்போதைய 
பெரு நாடு. வடக்கே, equator, தெற்கே, பொலிவியா, சில்லி, அர்ஜண்டைனா 
என்று ஒரு பெரிய சாம்ராஜ்யம். 
இதன் தலைநகரம் பெரு நாட்டின் 
2ஆவது நகரமான, குஸ்கோ (Cusco). 15ஆம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டினர் படையெடுத்து, இன்கா கலாச்சாரத்தை முழுவதுமாக அழித்துவிட்டுத் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். 
சென்ற நூற்றாண்டில் 1911ஆம் ஆண்டு  Bingham என்ற அமெரிக்க விஞ்ஞானி 
இந்த உன்னதமான இன்கா காலச்சாரத்தையும் அவர்கள் சாதனைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.
விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். இந்த வருஷம் புது வருஷத்தைக் குடும்பத்தோடு நான் கொண்டாடியது குஸ்கோ நகரில். இது தற்போதைய பெரு நாட்டின், 2ஆவது நகரம் 
(லீமா - பெரு நாட்டின் தலைநகரம்)- முந்தைய இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகர். 
நான், எப்படி, அங்கே
கேள்விகளுக்கு விடை இதோ.

Sunday, December 23, 2012

அமெரிக்கக் குழந்தைகளுடன் ஒரு இனிமையான கலந்துரையாடல்



மேலேயுள்ள படத்தில் இருப்பது -
 "நாந்தேன்". 
என்னுடன் இருக்கும் குழந்தைகள் - 
(இடமிருந்து-வலம்)
நேகா குமார்,மயூகா கார்திக்
சோனிதா சீனிவாசன்,
நேகா அரவிந்த், தீக்ஷா அய்யர்.
தலைப்பைப் பார்த்தவுடன் 
"வெள்ளைக்கார" அமெரிக்கக் 
குழந்தைகளை எதிர்பார்த்தவர்களுக்கு 
ஏமாற்றமாக இருக்கலாம். 
இங்கேயிருக்கும் குழந்தைகள் எல்லாம் 
அமெரிக்காவில் பிறந்து, படித்துவருகிற 
இந்தியத் தமிழ்க் குழந்தைகள். 
இந்தியத் தமிழ் வேர்களை மறக்காத 
குழந்தைகள். அதற்காக முழுப் பாராட்டும் 
அவர்களுடைய பெற்றோர்களைத்தான் 
சேரும். இந்தியாவில் படித்து 
வேலை தேடி வந்த 
இந்தப் பெற்றோர்கள் - 
இவர்கள் மாதிரி 
நிறையப் பேர் இருக்கிறார்கள் - 
தங்கள் குழந்தைகள் இந்திய/தமிழ்க் 
கலாச்சாரத்தை மறந்துவிடக் கூடாது 
என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 
Sunday Schoolக்கு அனுப்பி 
ஸ்லோகங்கள்தியானம், கீதை மூலம் 
தெய்வ பக்தியை வளர்ப்பதோடு 
இல்லாமல் தமிழ் மொழியைக் 
கற்றுத்தர ஏற்பாடுகளும் செய்கிறார்கள். 
‘Yatra’ விளம்பரத்தில் வரும் குழந்தைகள் 
மாதிரி இவர்கள் இருக்க மாட்டார்கள் 
என்பது ஒரு வரவேற்கத் தகுந்த விஷயம்.

(யாத்ரா விளம்பரத்தில்)
அம்மா காலையில் 
அறைஅறையாகச் சென்று 
சாம்பிராணி புகையைக் 
காட்டி வருகிறாள். 
அமெரிக்க பெண்மணி கேட்கிறாள் 
"உங்கம்மா என்ன செய்கிறாள்?" 
பையன் சொல்கிறான் 
"என் அம்மா, தினந்தோறும் 
fire alarm சரியாக இருக்கிறதா 
என்று செக் பண்ணுகிறாள்." 
விளம்பரத்தின் பஞ்ச் லைன் 
'Before they forget their roots, 
take them to India.

சரி விஷயத்திற்கு வருவோம்...
இந்தக் குழந்தைகள்LEGO 
என்ற ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள். 
இது குழந்தைகளின்"creative" 
ஆர்வத்தை வளர்க்க உதவும் 
ஒரு ஸ்தாபனம். 
"சீனியர் சிட்டிசன்" பற்றி 
ஒரு project பண்ணுகிறார்கள். 
அதற்காக, என்னை 
interviewக்கு கூப்பிட்டார்கள். 
என் நண்பர் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை 
மாலை இந்தக் குழந்தைகளைச் சந்தித்தேன். 
அவர்கள் பெற்றோர்களும் இருந்தார்கள். 
"என்ன பேச வேண்டும்" 
என்று கேட்டபோது
நண்பர் நந்தா சொன்னார் 
"நீங்கள் ஒன்றும் தயார் செய்துகொண்டு 
வர வேண்டாம். குழந்தைகள் கேட்கும் 
கேள்விகளுக்கு நீங்கள் பதில் 
சொன்னால் போதும்" என்றார்.

"சரி" என்று சரியாக ஆஜரானேன். 
ஆச்சரியம் ஒவ்வொரு குழந்தையும் 
ஒரு ipadஐ வைத்துக்கொண்டு 
என்னை interview பண்ணத் தயாரானார்கள். 
முதலில் இந்தச் சந்திப்பைக் 
கொஞ்சம் casual 
ஆகத்தானே எடுத்துக்கொள்ள 
நினைத்தேன். 
கொஞ்ச நேரத்தில் தெரியவந்தது
இவர்கள் எமகாதகக் குழந்தைகள் 
என்று. முன்னேற்பாடாகக் கேள்விகளைத் 
தயார்பண்ணிக் கொண்டுவந்திருந்தார்கள். 
இதோ அந்தக் கலந்துரையாடலின் 
சுருக்கம். 

Tuesday, December 18, 2012

‘ஜென்டில்மேன்’ ஆவது எப்படி?


                
இதற்கு விடை தேடும் முன் 
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

யார் ஜென்டில்மேன்?’
ஜென்டில்மேன் பற்றிய விளக்கத்தை 
இரண்டு கோணங்களில் அணுகலாம். 
ஒன்று - "இது இல்லை, அது" என்ற 
தத்துவ ஆசிரியர்கள் அணுகும் முறை. 
அதாவது
இந்த மாதிரி குணங்கள் உள்ளவர்கள்
ஜென்டில்மேனாக இருக்க மாட்டார்கள்’ 
என்ற விளக்கம். 

இரண்டாவது
பாஸிடிவ்வாக
ஜென்டில்மேன் என்பவர்கள்
"இப்படித்தான் நடந்துகொள்வார்கள்" 
என்ற விளக்கம்.
முதலாவது விளக்கத்தைத் 
தினசரி வாழ்க்கையில் 
அன்றாடம் சந்திக்கிறோம். 
இதோ சில காட்சிகள்.

சீன் 1:
வீட்டு டைனிங் டேபிளில் - 
சாப்பாட்டு நேரம். 
எல்லோரும் சாப்பிட 
உட்கார்ந்திருக்கிறார்கள். 
மகன், வாயில் உணவை வைத்துக்கொண்டு 
அதிகார தோரணையில் சத்தம்போட்டு 
ஏதோ உத்தரவு போடுகிறான். 
மகள் செல்போனில் யாருடனோ 
இரைந்து பேசிக்கொண்டு 
சாப்பாட்டில் அரைகுறை கவனத்தோடு 
செயல்படுகிறாள். 
அப்பாக்காரர் ஏதோ தீவிரமாக 
ஆபிஸ் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். 
அம்மாக்காரிக்குக் 
கோபம் பொத்துக்கொண்டு 
வருகிறது. கத்துகிறாள். 
"இது என்ன சாப்பாட்டு இடமா
சந்தைக் கடையா
மகனே, உனக்கு manners இல்லையா
எத்தனை தடவை சாப்பாட்டை 
வைத்துக்கொண்டு பேசாதே 
என்று சொல்லியிருக்கிறேன். 
நீ என்றுதான் 
ஒரு ஜென்டில்மேன் 
ஆகப்போகிறாயோ! 
மகளே, உன் செல்போன் 
manners சகிக்கலை. 
ஒரு பொறுப்புள்ள பெண்ணாக 
இரு. இல்லையானால் செல்போனைப் 
பிடுங்கிவிடுவேன். 
பெரியவரே
ஆபிஸ் மூட்டையை 
ஒதுக்கிவைத்துவிட்டு
ஒரு லட்சணப் புருஷனாகச் 
சாப்பிடுங்கள். 
கஷ்டப்பட்டு சமைத்த 
என் சாப்பாட்டை ஒருமனதாக 
ரசித்து சாப்பிட்டு 
நீர் ஒரு ஜென்டில்மேன் 
என்று நிரூபித்து
உங்கள் பிள்ளைகளுக்கு 
ஒரு எடுத்துக்காட்டாக இரும்" 
என்றாள்.

சீன் 2:
காலேஜ் லெக்ஸர் ஹால்.
புது வாத்தியார் - ஒரே ரகளை - 
கூச்சலும் கும்மாளமும். 
வாத்தியார் கத்துகிறார்.
"Shut up. Behave yourself. 
பொறுக்கித்தனமாக 
நடந்துகொள்ளாதீர்கள். 
ஜென்டில்மேனாக இருக்க 
முயற்சி பண்ணுங்கள். 
நீங்கள் காலேஜ் மாணவர்கள். 
தெருப் பொறுக்கிகள் இல்லை."
சீன் 3:
ஒரு வியாபாரிக்கும் 
அவருடைய வாடிக்கையாளருக்கும் 
நடக்கும் உரையாடல்.
வாடிக்கையாளர்:  என்ன சார்
account statement 
அனுப்பவில்லையே
பணம் வேண்டாமா?
வியாபாரி: சார், நாங்கள் 
எப்பொழுதும் ஜென்டில்மேனிடம் 
பணம் கேட்டுத் தொந்தரவு 
செய்ய மாட்டோம்.
வாடிக்கையாளர்: அப்படியா
அவர் பணம் செலுத்தவில்லை
என்றால் எப்படிச் சமாளிப்பீர்கள்?
வியாபாரி: அது ஒன்றும் பெரிய 
விஷயம் இல்லை. 
கொஞ்ச நாளில் பணம் 
வரவில்லையானால் 
அந்த நபர் gentleman இல்லை 
என்று முடிவுசெய்து பணத்தைக் கேட்டு 
ஆள் அனுப்புவோம்.
வெவ்வேறு விதமான 
மனிதர்கள்
எப்படியெல்லாம் ஜென்டில்மேன்’ 
தகுதியை இழக்கிறார்கள் 
என்பதற்கான விளக்கங்கள்தான் 
மேலே சொன்ன காட்சிகளிலிருந்து 
தெரியவருகிறது.

Monday, December 10, 2012

வயதான பெற்றோர்களை அலட்சியப்படுத்துவது, துன்புறுத்துவது (Parent Abuse) - ஒரு மன்னிக்க முடியாத குற்றம்.



அநேகமாக, நம்மில் எல்லோருமே, சீக்கிரமாகவோ, கொஞ்ச நாள் கழித்தோ, சந்திக்க வேண்டிய நிலைமை 
நம் வயதான பெற்றோர்களை 
எப்படிப் பார்த்துக்கொள்ளப்
போகிறோம் என்பது.
பொருளாதார வளர்ச்சியினாலும், மருத்துவத் துறையில் ஏற்பட்ட 
மகத்தான மாறுதலினாலும், பெரும்பான்மையான மக்கள் 
நீண்ட நாட்கள் வாழும் 
வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். 
அதே பொருளாதார வளர்ச்சி
மக்கள் மனத்தையும் ஓரளவு பாதித்திருக்கிறது.

வயதான பெற்றோர்களை 
ஒரு பாரம்என்று நினைக்கும் 
ஒரு மனநிலை இன்றைய 
இளைய தலைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது 
என்பது ஒரு வெட்கப்பட 
வேண்டிய விஷயம்.

மாமியார் கொடுமை’, 
குழந்தைகள் கொடுமைபற்றி 
நிறையவே மீடியாக்களில் 
பேசப்பட்டு, எழுதப்பட்டுவருகின்றன. 
ஆனால் parent abuse - 
பெற்றோர்களைக் 
கொடுமைப் படுத்துவது 
என்பது அவ்வளவாக வெளிச்சம் 
போட்டுக் காட்டப்படவில்லை. 
ஆனால், அந்த மாதிரி 
பெற்றோர் கொடுமைநடந்துகொண்டிருக்கிறது 
என்பது தான் உண்மை.